Showing posts with label சமிக்ஞை. Show all posts
Showing posts with label சமிக்ஞை. Show all posts

Monday, October 28, 2013

உயிர் பறிப்புக்கு யார் காரணம்?

சதீஸ்குமாரின் எதிர்கால கனவு தட்டா தெருச்சந்தியில் கலைந்துபோயிருக்கிறது. அந்த நிமிடம் வரை எத்தனையோ ஆசைகளைக் கொண்டிருந்த அவனது பயணத்தில் இணை பிரிந்து போயிருக்கிறது. திருமணம் முடித்து ஏழு மாதங்களேயான சதீஸ்குமார் கீர்த்தனா மீது வைத்திருந்த பாசம் தட்டாதெருவில் அவள் குற்று யிராய் கிடக்கையில் கொட்டித் தீர்த்தது. பார்ப்பவர்கள் மனதை பிசைந்த அந்தக் கொடூர விபத்துக்கு யார் காரணம்? யார் காரணமாக இருந்தால் என்ன போன உயிர் திரும்பிவந்து விடுமா?
ஆசிரியரான சதீஸ்குமாரும் மனைவியும்
பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிந்தனர். இரவு 10 மணி இருக்கும் யாழ்.நகரப்பக்கம் இருந்து கே.கே.எஸ். பிரதான வீதியூடாகச் சென்ற இவர்கள் தட்டா தெருச்சந்தியில் நல்லூர் வீதிக்குத் திரும்பியுள்ளனர்.
கிட்டத்தட்ட 20 மீற்றருக்கு முன்பாகவே இவர்களது மோட்டார் சைக்கிள் நல்லூர் வீதிக்குத் திரும்பும் பக்கமாக செலுத்தப் பட்டிருக்கிறது. அப்படியாயின் பின்னே வரும் வாகனங்கள் மோட்டார் சைக்கிள் நகர்வை கருத்தில் கொண்டு தமது வழித்தடத்தைத் தீர்மானித்திருக்க வேண்டும்.
இவை எல்லாம் சிறு பொழுதில் வேறு விதமாக நடந்தேறிவிட்டன. வீதியின் முக்கால் பங்கைக் கடந்துவிட்ட மோட்டார் சைக்கிளை துரத்திவந்து வேண்டுமென்றே இடித்ததுபோல் விபத்து நடந்திருக்கிறது.

இராணுவ பஸ்
மோட்டார் சைக்கிளை மோதியது இராணு வத்தினரை ஏற்றிவந்த பஸ். இந்த பஸ் பின் பக்கமாக மோட்டார் சைக்கிளை மோதியிருக் கிறது. அதுவும் பஸ் செல்லவேண்டிய பக்கத் துக்கு எதிர்ப்பக்கமாக வைத்தே மோதியுள்ளது. பஸ்சாரதி மீதே முழுப்பிழையையும் சுமத்து கின்றனர் சம்பவத்தை நேரில் கண்டவர்கள். யார் மீது பிழை இருப்பினும் ஒர் உயிர் காவுகொள்ளப்பட்டுவிட்டது. இதற்கு எவரைத் தண்டித்தாலும் தீர்வுகிட்டாது.

ஆபத்தான அமைவிடம்
வீதி அகலிப்புக்குப் பின்னர் தட்டாதெருச் சந்தி ஆபத்துக்கள் நிறைந்ததாக மாறியுள்ளது. அதாவது கே.கே.எஸ்.பிரதான வீதி மானிப் பாய் வீதி நல்லூர் வீதி என்பன இடைவெட்டு கின்றன. இவை நேருக்கு நேராக இன்றி சற்று முன்னும் பின்னுமாக அமைந்திருப்பது ஆபத் தாக உள்ளது. குறிப்பாக வீதி விதிமுறைகளை சிலர் சற்றேனும் கடைப்பிடிக்காமல் இந்தக் கடவையைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மானிப்பாய் வீதியில் இருந்து கே.கே.எஸ். வீதிக்கு உட்புகும் ஒருவர் நல்லூர் வீதிக்கு செல்லும்போதும், நல்லூர் வீதியில் இருந்து மானிப்பாய் வீதிக்குச் செல்லும் போதும் வீதி விதிமுறை எவற்றையும் சிலர் பின்பற்று வதில்லை. இதனால் இந்தச் சந்தியில் அடிக்கடி போக்குவரத்துத் தடங்கல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

சமிக்ஞை இல்லை
வீதிப் புனரமைப்பு பணிகள் நீண்ட காலமாக பூர்த்திசெய்யப்படாத நிலையில் பிரதான வீதி யில் வீதிக்குறியீடுகள் எவையும் போடப்பட வில்லை. இதனால் வெளியிடத்தில் இருந்து வரும் சாரதிகளுக்கு வீதி அமைப்பை அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இதனால் புதிய வீதியில் பறந்துவரும் இவர்களது கால்கள் பிறேக்கில் முட்டுவதில்லை. இதனாலும் விபத் துக்கள் தவிர்க்கமுடியாததாகின்றன.
இராணுவ பஸ்சும் வேகக்கட்டுப்பாட்டை மீறிக் கட்டுப்படுத்தமுடியாத நிலையிலேயே தமது தடத்துக்கு எதிர்ப்பக்கம் சென்றுள்ளது.

சாட்சிக்கு மறுத்த பார்வையாளர்
சம்பவம் நடந்ததும் பொலிஸாரும் இராணு வத்தினரும் குவிந்தனர். சந்தி நிறைந்த சனக் கூட்டம். பஸ்ஸிலும் இராணுவத்தினர். அதை விட சி.ஐ.டி. என்று கூறும் சில சிவில் சிக்கல் களும் நின்றன.
இதன்போது பொலிஸார் சம்பவத்தை நேரில் கண்டவர்களை விசாரிக்க பொலிஸார் அழைத்த போது எவரும் முன்வரவில்லை. தமக்கு இத னால் ஆபத்துவரும், பொலிஸாருடன் இழுபட வேண்டும் என்பதற்காக அவர்கள் இந்தப் பொறுப்பில் இருந்து நழுவிவிட்டனர். ஒரு ஆசிரியரைத்தவிர.
இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் பலர். இவர்கள் எவரையும் தண்டிக்கமுடியாது. அப் படி தேடித்தேடித் தண்டித்தாலும்கூட பிரிந்த உயிரைப்பெற்றுவிடமுடியாது.
குற்றம் இழைத்தவர் யார் என்ற கேள்விக்கு எல்லாத்திசைகளிலும் விரல்கள் நீளும். கண்ணீர் துயரமும் நம் உயிருக்கு நாமே பாதுகாப்பு ஆனாலும் தேடிவரும் வீண் இழப்புக்களை தவிர்ப்போம்..

நன்றி சுடர்ஒளி 09-15.ஒக்ரோபர் 2013