Sunday, November 3, 2013

சிங்களத்தில் பேசுங்கோ..


போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவ ரைக்கும் பயங்கரவாதம், பிரிவினை என்று பேசப்பட்ட விடயங் கள் இல்லையயன்றும் புதிதாக ஜன நாயக நாடொன்று பரிணமித்து இருப் பதாகவும் இலங்கை அரசு சொல் கிறது. ஜனநாயக நாட்டுக்கு இருக்க வேண்டிய பண்புகள், அடிப்படைத் தகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இலங்கையை இந்த தராசில் எந்தப் பக்கத்தில் வைப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு  மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.

ஆனால் இந்திய இலங்கை உடன் படிக்கையின் பிரகாரம் ஏற்படுத் தப்பட்ட அரசமைப்பின் பதின்மூன் றாவது திருத்தத்தின் குறிப்பிடப்பட்ட விடயங்கள் மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.
இதனை விட மாகாண சபைக்கு இருக்கக்கூடிய சில அதிகாரங்களை மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட சில வழிமுறைகள் மூலம் பறித் தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

பொலிஸ் அதிகாரம் மறுப்பு
வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்க ளின் மொழி, கலை, கலாசார பண் பாட்டு  முறைகளை புரிந்து கொள்ளக் கூடிய வகையில் பொலிஸ் நிர்வாகம் அமைய வேண்டும் அதனூடாகவே அமைதியான சூழலை உருவாக்க முடியும். மாறாக தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு எந்த விதத்திலும்   பொருத்தமற்ற சிங்கள மொழி பேசுபவர்கள் தொடர்ந்தும் பணியாற் றுவது இங்கு ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதற்கு தடையாக இருக் கும். எனவே வடக்கில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப் பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர்  க.வி.விக்னேஸ் வரன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை யும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்வதற்கு தமது கலாசாரத்தை புரிந்து கொள்ளக் கூடிய ஒரு பிரதி நிதியைத் தேடுகின்றனர்.
கருத்து வெளிப்பாடு, பிரச்சினை களை ஒளிவின்றி பேசுதல், நீதி கிடைக் கும் என்ற நம்பிக்கையை கட்டியயழுப் புதல் போன்ற காரணங்களுக்காக தமிழ் மக்கள் தமக்கு சார்பானவர்களையே ‡ பரிச்சயமுடையவர்களையே எதிர் பார்க்கின்றனர்.
ஆனால் வடக்கில் நீண்ட காலமாக இந்தப் பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளது.
பொலிஸ் நிலையங்களில் தமது பிரச்சினைகளை முறையிடச் செல் வோர் மொழி, கலாசாரம், பண்பாடு போன்ற விடயங்களில் நெருக்கடி களை எதிர்நோக்கு கின்றனர்.
சாட்சி கூறச்  செல்பவர்கள் ஏளனம் செய்யப்படுவது, முறைப்பாடு செய்ப வர்கள் அலைக்கழிக்கப்படுவது, அலட்சியப்படுத்தப்படுவது மொழித் தொடர்பாடல் புரியாததால் இரண்டு தரப்பினருமே வெவ்வேறான அர்த் தங்களை கொள்வது என்று மொழி நிலை முரண்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.

பொலிஸ் பேச்சாளரின் மறுப்பு
புதிதாக தமிழ்ப் பொலிஸாரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் வடக்குக்கு இல்லை. ஒரு தொகுதி தமிழ் பொலிஸார் ஏற்கனவே இணைத்துக் கொள்ளப் பட்டுள்ளனர். தவிர தமிழ் தெரிந்த பொலிஸார் அநேகமானவர் அங்கு கடமையாற்றுகின்றனர். இதற்கு மேலதிகமாக ஆளணிகளை பெருக்க வேண்டிய அவசியம் அங்கு இல்லை. வடக்கில் உள்ள எல்லா பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் தெரிந்த பொலிஸார் உள்ளனர். அங்கு தமி ழில் முறைப்பாடு செய்யவும் முறைப் பாட்டுப் பிரதியை தமிழில் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் இருக்கின்றன.
எனவே முதலமைச்சர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் பேச்சாளர் மறுத்திருக்கிறார். 

தமிழ் தெரியாத பொலிஸார்

இரு தரப்பு வாதங்கள் இப்படி இருக்க இன்றும் வடக்கில் தமிழ் தெரியாத பொலிஸார் கடமையில் இருக்கின் றனர்.
ஓர் இடத்தில் நடக்கும் வன்முறை சம்பவம் தொடர்பில் அதை அவதா னிக்கும் ஒருவர் உடனடியாக தொலை பேசி மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்க முடியாத நிலை காணப் படுகிறது.
சமூக அக்கறை காரணமாக பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவரிடம் "" தமிழ் தெரி யாது. சிங்களத்தில் பேசுங்க'' என்று கூறுகிறார் பொலிஸ் அதிகாரி என்று கவலையுடன் தெரி விக்கிறார் அந்த அக்கறைவாதி.
இன்றும் பல பொலிஸ் நிலை யங்களில் சிங்க ளத்தில் முறைப் பாடு கள் பதிவு செய் யப்படுகின்றன. முறைப்பாடு செய்ய போகும் ஒருவர் தமிழ் தெரிந்த பொலி ஸார் வரும் வரை பொலிஸ் நிலை யத்தில் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வீதிகளில் போக் குவரத்து ஒழுங்கு முறைகளை சோதனையிடும் சிலருக்கு தமது நிலைப்பாட்டை சரியாக விளங்கப்படுத்த முடியாமல் தமிழ் மக்கள் திண்டாடுகின்றனர்.
அனுமதிப் பத்திரத்துடன் தமது தேவைகளுக்காக காட்டு மரங்கள் , கட்டடப் பொருள்கள் என்பனவற்றை கொண்டு செல்லும் மக்களை இடை மறிக்கும் பொலிஸார் தேவையற்ற வகையில் அணுகுகின்றனர். இது இலஞ்சம் வரை செல்கிறது. வன்னிப் பகுதியில் பொலிஸார் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மக்கள் வெளிப்படுத்திய சம்பவங்கள் பத்திரிகைகள் வாயிலாக அறிய முடிகிறது.

பொலிஸ் கடமையில் இராணுவம்
இவற்றை விட பொலிஸார் செய்ய வேண்டிய பல வேலைகளை வட பகுதியில் இராணுவத்தினர் செய்யும் நிலை அவதானிக்கப்படுகிறது.
விபத்து நடைபெறும் இடம் அல்லது குழு மோதல், பிரச்சினைகள் இடம் பெறும் இடங்களுக்கு முதலில் இரா ணுவத்தினரே வருகின்றனர். இவர் கள் வந்தவுடன் தாமே நீதிபதிகள் போலவும், பொலிஸார்கள் போல வும் நடந்து கொள்கின்றனர். தமக்கு வேண்டியவர்கள் எனில் உடனடி யாக அவர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி பாதிக்கப்பட் டவர்களை மிரட்டி வெளியேற்றி விடு கின்றனர். குறிப்பாக தென்பகுதியில் இருந்து வரும் சுற்றுலாப் பயணி களின் வாகனங்களின் தறிகெட்ட ஓட்டத்தால் விபத்துக்கள் நேருகின் றன. ஆனால் சம்பவ இடத்திற்கு வரும் இராணுவத்தினர் துப்பாக்கி முனையில் காரியத்தை சாதித்து விடுகின்றனர்.
தடயங்களை அழித்தல், குற்றத்தை நியாயப்படுத்தல், குற்றவாளிகளை தப் பிக்கவிடுதல் போன்ற செயற்பாடு களில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு என்ற போர்வையில் வீதியில் செல்பவரை இடைமறித்து தொந்தரவு செய்தல், பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனர்.
முல்லைத்தீவில் கடை உரிமையா ளர் ஒருவர் தனது பாரவூர்தியை கடைக்கு முன் நிறுத்தி வைத்ததற் காக இராணுவத்தினரால் அச்சுறுத் தப்பட்டுள்ளார். மறுநாள் காலை கடையை பூட்டி விட்டு விசாரணைக்கு வரு மாறும் அழைக்கப்பட்டிருக்கிறார். இது கடந்த வாரம் முல்லைத்தீவில் இடம்பெற்ற சம்பவம்.
இப்படி பொலிஸாருக்கு உரித்தான கட மைகள் பலவற்றை வட பகுதியில்  இராணுவத்தினர் செய்வதை அவ தானிக்க முடிகிறது.

மக்களுக்கு அச்சுறுத்தல்

ஜனநாயக   நாட்டில் பொலிஸ் நிர்வா கம் துப்பாக்கிகள் அற்ற சாதாரண மனித பண்பு கொண்ட நிர்வாக முறைமை. இங்கு மக்கள் பயமின்றி  சட்ட திட்டங் களுக்கு கட்டுப்பட்டு ஒழுகுவர். ஆனால் இலங்கையில் அப்படி ஒரு நிலை இல்லை. பொலிஸாரும் இரா ணுவத்தினரை போன்று அடக்கு முறைவாதிகளாக தம்மை அறிமுகப் படுத்திக் கொள்கின்றனர். இதனால் தற்போதும் பொலிஸ் மற்றும் இரா ணுவத்தினரை மக்கள் எதிரிகளாக நோக்குகின்றனர்.

நிலைமை மாற வேண்டும்

வடக்கில் அதிகார தொனியிலான பொலிஸ் நிர்வாகம் மாற்றப்பட்டு மக்கள் இயல்பாகச் சென்று தமது பிரச்சினைகளை முறையிட்டு தீர்த் துக் கொள்ளும் நிலை ஏற்படுத்தப் பட வேண்டும்.
ஒரு சம்பவம் தொடர்பாக சாட்சி சொல் பவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மாறாக அவர்களைத் தொந்தரவு செய்வதன் மூலம் சாட்சியாளர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களி ருந்து நழுவிச் செல்லும் முறையே தோற்றுவிக்கப்படும். தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் இருபத்தி நான்கு மணி நேரமும் கடைமை யில் ஈடுபடுத்தப்பட வேண்டும். முறைப் பாடு பதிவு செய்யச் செல்பவர் தமிழ் பேசும் அதிகாரிக்காக காத்திருக்கும் நிலைமை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்ப் பொலிஸாரை
இணைத்துக் கொள்ளல்

பொலிஸ் தரப்பு தமிழ் இளைஞர் யுவதிகளை சேவையில் இணைத் துக் கொள்வதற்கு விரும்பவில்லை. இதுவே பொலிஸ் பேச்சாளரின் கருத் தில் இருந்து வெளிவருகிறது.
ஆனால் இந்த மனோநிலை மாற்றப் பட வேண்டும். நல்லிணக்கம் ஏற் படுத்தப்பட வேண்டுமாயின் நிர் வாக கட்டமைப்புகளிலும் மாற்றீட்டு கொள்கைகள் அவசியம்.
அதாவது தமிழர்களுக்கு அதிகாரங் களை வழங்குவதால் நெருக்கடி ஏற் படும் என்ற இனத்துவ எண்ணக் கருவை விலக்கி மாகாண அதிகாரங் களுக்கு ஏற்புடையதாக நிர்வாக கட்ட மைப்பை செயல் உரு பெற செய்ய வேண்டும்.

கருத்துக்கு எதிர்க் கருத்து
வட மாகாண சபை இயங்க ஆரம் பித்தது முதல்  சபையால் வெளியி டப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் அரச தரப்பில் இருந்து எதிர்க் கருத்தே வெளிவருகின்றது. இந்த நிலை எதிர்காலத்தில் நெருக்கடியையே  உருவாக்கும். தமிழ்த் தரப்பு தமக் கான உரிமை விடயங்கள் வலு வாக  இருக்க வேண்டும் என்று விரும் புகின்றது.
அதே சமயம் தமிழ் மக்களுக்கான நியாயமான உரிமைகளை வழங்க அரச தரப்பு சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
ஒருவர் கூற அதற்கு மறுப்பு கூறுவ தற்கு காத்திருப்பது அபாயத்தின்  விளிம் புகளுக்கே அழைத்துச் செல்லும்.

நன்றி சூரியகாந்தி(03.11.2013)

No comments: