Sunday, January 22, 2012

அபிவிருத்தி மீது வீசப்படும் கற்கள்



இலங்கையின் அபிவிருத்தி ஆசியாவின் ஆச்சரியமாக்02014010100001 2030ஆம் ஆண்டில் மாற் றப்படும் என்ற தூர நோக்குடன் மஹிந்த அரசு பல் வேறு நெருக்கடிக்குள்ளும் சவால்களுக்குள்ளும் அதற்கான பணிகளை வேகப் படுத்தி வருவதாகப் பேசப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்குஅங் குள்ள உட்கட்டமைப்பு வசதிகளே பெரிதும் மூலகாரணங்களாக அமைகின்றன. இதில் இடங்களுக்கிடையிலான தொடர்பைப் பேணும் வகையில் போக்கு வரத்துத்துறை முக்கிய பணியாற்றுகின்றது.
இலங்கையின் அபிவிருத்தியில் இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் துறையாக பெருந் தெருக்கள் மற்றும் துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து போன்றவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
வரலாற்றின் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இருப்பதாக அரச தரப்பு மார் தட்டிக்கொள்கின்றது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ் சாலை அமைப்பு என வீராப்புப் பேசும் அரசு இன்னும் பல அதிவேக வீதிகளை நாட்டின் பல பாகங்களிலும் உருவாக்க வுள்ளதாக உறுதி கூறியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு வீதி வலையமைப்பு முக்கியமானதாக இருந்தாலும் ஏனைய துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அபிவிருத்தியைச் சமவேகத்தில் நகர்த்த முடியும்.
இலங்கையில் இப்போது இடம் பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துறைசார் கட்டமைப்புக்களுக்கிடையில் வேறு பாடுகளை உருவாக்குவனவாக உள்ளன.
இலங்கை அரசால் நடைமுறைப்ப டுத்தப்படும் அபிவிருத்தி வேலைகள், மக்களது அடிப்படைத் தேவைகள், அன்றாடத் தேவைகளுக்கு விடைகாணாது புதிய பாதையில் செல்வதை உணரமுடிகின்றது.
அண்மையில் 2011.11.27 அன்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் இப்போது பாவனையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியங்களே மக்களது தேவைகளுக்கும் அரசின் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை உணரவைத்துள்ளன.

அதிருப்திகளின் அதிவேகம்

தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் வாகனங்கள் வேகமாகச் செல்லும்போது அவற்றின்மீது கற்கள் வீசப்படுகின்றன.
நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன்பின் இத்தகைய கல்வீச்சுகளால் 57வாகனங்கள் சேதமடைந்ததுடன் 18 பேர் காயமடைந்துள்னர்.
வாகனங்களுக்கு கல்லெறிபவர்கள் தொடர்பில் விழிப்பு குழுக்கள் வீதிக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது கண்களைக் கட்டிவிட்டு கல்வீச்சுக்கள் தொடர்கின்றன.
வீதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கென விஷேடமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது கார்களும் 06 மோட்டார்சைக்கிள்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை இந்த வீதியில் ஏற்படும் விபத்துக்கள், இடையூறுகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாகனத்தில் பயணிப்பவர்கள் வேகக் கட்டுப்பட்டைப் பேணவேண்டும்,வீதி ஒழுங்கைப் பேணவேண்டும், விபத்துக் களிலிருந்து தப்பிக்கவேண்டும். இடைநடுவில் வாகனங்களை நிறுத்திக் கல்லெறி காரர்களை இவர்களால் ஒன்றும் செய்து விடமுடியாது.வாகனம் நிறுத்தப்பட்டால் அடுத்த கணமே விபத்துத்தான்.

நாய்களுக்கும் அதிருப்தி

சாலை பாவனைக்குவிடப்பட்டதும் திடீர் திடீரென விபத்துக்கள் நிகழ ஆரம்பித்தன. காரணம் புரியாது கண்காணிப் பாளர்கள் அதிர்ச்சியுற்றனர். அப்போது தெருநாய்கள் வீதியால் குறுக்கறுப்பது தெரிய வந்தது. ஏற்கனவே வீதிக்கு வேலி போடப்பட்டிருக்கிறது. ஆனால் நாய் களுக்கு அது போதாது. ஆடு அல்லது மாடு அதிலிருத்து தப்பிக்க முடியும். யானை கூட அண்மையில் இந்த வீதியைக் குறுக் கறுத்தது. சில இடங்களில் மண்அணை போடப் பட்டிருந்தாலும் எல்லா இடங் களுக்கும் அவை விஸ்தரிக்கப்டவில்லை.
நாய்களின் குறுக்கறுப்பால் வீதி திறக் கப்பட்ட அடுத்த நாளே வாகன விபத் தொன்று நடந்தது. திறக்கப்பட்ட 72 மணித் தியாலங்களுக்குள் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றன. 2 மாதங்களுக்குள் 80 விபத்துக்கள் பதிவாகியன. இவற்றில் பலவுக்கு நாய்கள் மீதே பழிபோடப்பட்டது. அவை யும் பலி கொள்ளப்பட்டன.
மஹிந்தவின் சிறப்பு உத்தரவு நாய்களைக் கொலை செய்யக்கூடாது என்று. ஆனால் அவரின் கனவான அதிவேக சாலையும் அதில் பயணிக்கும் வாகனங்களும் நாய்களைக் கொலைசெய்யும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளதை அவர் எந்தத் திட்டத்தைக் கொண்டு சீர்செய்யப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புதிதாக ஏதாவது திட்டம் அவருக்குள் இருந்து வரும்வரை.
இந்த நெடுஞ்சாலையின் நோக்கம் நகர்பகுதியில் ஏற்படும் வாகன நெருக் கடியைக் குறைப்பது, வேகமான போக்கு வரத்து, பயணிகள் இலகுவாகவும் குறைந்த செலவுடனும் பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளுதல் போன்றனவாகக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு தேவை இதுவல்ல. இப்போதைக்கு எங்களது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டு அடுத்த கட்டமாகச் சர்சதேச நிலையிலான அபிவிருத்திகளை நீங்கள் மேற்கொள்ளலாம். எங்கள் வயல்காணிகள், மேட்டுக்காணிகள் என்பவற்றின்மீதே நீங்கள் உல்லாச சவாரி செய்கின்றீர்கள். அதனால் ஆத்திரமடைந்தே நாங்கள் கற்களை வீசுகிறோம். எங்கள் வளமான காணிகள்மீதே இந்த வீதி அமைந்திருக்கிறது என்று கல்லெறி காரர்கள் எண்ணுகிறார்கள். இதற்காகவே வீதிக்குவந்து கற்களை வாகனங்கள் மீது அவர்கள் வீசுகிறார்கள்.
அபிவிருத்தியின் தேவையில் இதுவும் ஒன்றுதான். அது எப்போது தேவை என்பதும்,மக்களது இப்போதய தேவை என்னவென்றும் தீர்மானிப்பது அரசுதான். எனவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும். *


பணிஆரம்பம்:
2003
நிதி உதவி:
ஜப்பான் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசு.
நிர்மாணச் செலவு:
சுமார் 77 பில்லியன் ரூபா.
தூரம்:
கொழும்பு கொட்டாவிலிருந்து காலி பின்னது வவரை 100 கிமீ (கொட்டாவ, கஹதுட்டுவ, கௌனிகம, தொடங்கொட, லெவன்துவ, குருந்துகஹ, நாயபமுல்ல ஆகிய இடங்களைக் கடந்து பின்னத்துவ வரை)
தடை:
100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியாத வாகனங்கள், அதிகளவு புகையை வெளியிடும், முறையாக நிறுத்தற் கருவிகள் (பிரேக்) செயற் படாத வாகனங்கள் வெளிச்ச, சமிக்ஞை விளக்குகள் முறையாக இல்லாத வாகனங்கள், பாதசாரிகளுக்கு இந்தவீதியில் தடை
நுழைவாயில்:
08. கொட்டாவை, கஹதுடுவ, களனி கம, வெலிபின்ன, குறுந்துஹ, தாபிம, தொடங்கொடை, பத்தேகம, பின்னதுவ.
வேகம்:
80120 கிமீ(மணிக்கு)
கட்டணம்:

கார்,கெப்ரக வாகனம்,9 ஆசனங்கள் வரையுள்ள சகல வாகனங் கள், எக்ஸல் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 400 ரூபா,9 ஆசனங்களுக்கு அதிகமான பஸ் மற்றும் 33 ஆசனங்கள் கொண்டுள்ள சகல பஸ்களுக்கும் 700 ரூபா, 22 இற்கும் அதிகமான ஆசனங்களைக் கொண்ட பஸ், 6 சக்கர வாகனங்கள் மற்றும் எக்ஸல் 3 ஐ உடைய மோட்டார் லொறி, டிரக் வாகனம் ஆகியவற்றுக்கு 1500 ரூபா, ஒன்றாக இணைக்கப்பட்ட கோச் 2 உடன் பயணிக்கும் பஸ், எக்ஸல் 4 மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு 2000 ரூபா.



நன்றி உதயன்-சூரியகாந்தி (௨0௧௨. 2௨.01)

Saturday, January 14, 2012

மறக்கத்தெரிந்த மனமே...


"உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்''இந்த வார்த்தையை பழமொழியாகப் பார்ப்பதைவிட இப்போதெல்லாம் உண்மையான அனுபவங்கள் எண்ணிலடங்காதளவுக்கு பெருகிவிட்டன. சமூகத்தி முன்மாதிரியாக இருக்கின்ற சிலர் தமது சொந்த வாழ்க்கையில் பிழைவிட்டுவிடுகிறார்கள் என்பதும் மற்றுமொரு அனுபவம்.

ஆனாலும் சோற்றை உண்டபின் அந்தப் பாத்திரத்துக்குள்ளளேயே.... கழிப்பது, அதற்குக் காரணம் கற்பிப்பது எவ்வளவுக்கு நீதியானது என்பது சங்கடமான விடயம்தான். இருந்த போதிலும் இலங்கையில் இது சர்வ சாதாரணமப்பா.

நாட்டுக்காகப் பாடுபட்ட மனிதர்களில் முக்கியமானவர் பொன்சேகா என்று பேசப்பட்டது. மரணத்திலிருந்து மீண்டுவந்த ஒரு செயல்வீரன் என்று கூறிப் பொறுப்பில் இருக்கும்வரை அவர் முருங்கை மரத்தில் ஏற்றப்பட்டார். அவரிடம் இருந்து பெற்றாக வேண்டிய அனைத்தும் நிறைவுற்றதும் இப்போது அவர் கம்பி எண்ணுகிறார். இது அரசு ஒரு தனிமனிதனுக்கு இழைத்த துரோகம். அந்தத் துரோகம் பொன்சேகா குடும்பத்துடன் முடிந்துவிடலாம். அல்லது அவர் சேர்ந்த சிலருக்கு, வேதனையாக இருக்கலாம். ஆனால் ஓர் இனத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கும் இழைக்கும் துரோகம். இலகுவில் மறக்க முடியாது. ஒருவருக்கு மன்னிப்பையும், தீர்ப்பையும் அவர் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாறாக வரலாறோ, பாதிக்கப்பட்ட மக்களோ இவ்வாறானவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. துரோகம் இழைத்தவர்கள் தாமாக உருவாக்கிக்கொண்ட ஒரு பின்புலத்திலிருந்து மக்களை ஏமாற்ற முற்படுவது, ஏமாற்றுவது எந்த வகையில் நியாயமானது என்பது இன்றும் புரியாத விடயமாகியுள்ளது. காரணம் நாட்டினது அரசியலும், ஆட்சியும் அந்தளவுக்குச் சுயலாபமாக்கப்பட்டுள்ளன.

இந்த சுயலாப அரசியலில் இப்போது நுழைந்துள்ள மனிதன் ஓர் இனத்தின் துரோகி என வர்ணிக்கப்பட்ட, அரசின் செல்லப்பிள்ளை யாகியுள்ள கருணா அம்மான். இந்தப் பெயரை யாழ்ப்பாண மக்கள் தனக்கு வைத்ததாகக் குறிப்பிடும் இவர், அதை மக்கள் கூப்பிட்டால் தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார். இந்தப் பெயரை யாழ்ப்பாணமக்கள், ஐக்கிய சுதந்திர முன்னணியினருடன் இணைந்து திறம்படச்செயற்பட்டதற்காக சூட்டவில்லை என்பதைக்கூட உணர முடியாத மனிதனாக மாறியிருக்கிறார் கருணா. இவரின் மாற்றங்கள் தொடர்கின்றன.

1997.05.13 ஜெயசிக்குறு வெற்றி

விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக 1996, 1997 காலப்பகுதிகள் காணப் பட்டன. குறிப்பாக விடுதலைப் போராட்டதில் புதிய மரபு ரீதியான தாக்குதல் உத்திகளால் பலம் வாய்ந்த இலங்கை அரச படைகள் பின்வாங்கி ஓடிய சம்வங்கள் அதிகம் இடம்பெற்றன. இந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் கருணாவும் இடம்பெற்றிருந்தார். ஜெயசிக்குரு எதிர்ச்சமர் கருணா வுக்கு புதியதொரு பலத்தைத் தேடிகொடுத்திருந்தது.

இந்த துன்பத்தின் மீட்சியாக விடுதலைப் புலிகளின் மரபுவழி இராணுவ நடவடிக்கை அமைந்தது. இதற்கு வித்திட்ட பெருமை கூடுதலாக கிழக்குப் போராளிகளுக்கு உரியது. அங்கிருந்து ஆயிரம் போராளிகள் வரை வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானே தனது அணிப் போராளிகளையும் வேறு போராளிகளையும் கொண்டு படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரை வெற்றிகொள்ளக் காரணமானார்.

கருணாவின் போரிடும் ஆற்றல் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மதிப்பு மற்றும் மரியாதை ஒருவகையில் பின்வந்த காலங்களில் துரோகத் தனத்துக்குக் காரணமாகியது.

விடுதலைப் புலிகள் போரிடும் வலுவில் இலங்கை அரசுக்கு சவாலாக சம இராணுவ பலத்துடன் இருக்கின்றார்கள் என்ற செய்தி இவ்வாறான வெற்றிச் சமர்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இதனால் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளுடன் சமரசமுயற்சியொன்றில் ஈடுபடவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அவர்கள் கொண்டுள்ள கட்டமைப்புக்களை சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.

இலங்கை அரசின் ஆசையை, அவர்களது கபடத்தனத்தை நிறை வேற்றி வைப்பதற்கு புதிய மனித ராக விடுதலைப் புலிகள் அமைப் பில் இருந்தே கருணா செயற்படத் தொடங்கினார். இது அடுத்துவந்த காலங்களில் பல்வேறு நெருக்கடி களையும், ஒரு விடுதலை அமைப் பின் இருப்பையும் கேள்விக்குறி யாக்கியது எனலாம். இந்தக் காலப்பகுதியில் தன் இனத்திற்கே கருணா இழைத்த துரோகச் சம்ப வங்கள் சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான திடீர் மாறுதல் களின் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய பாரம்பரியங்களை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார் கருணா.

2006.11.27 மாவீரர்தின அறிக்கை

விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கிய கருணா மாவீரர் தினத்தையும் கொண்டாடினார். அப்போது அவர் மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ""தாயக பூமியில் சகோதர இனங்களுடன் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதுடன் உலக மயமாக்கலுக்கேற்ப சமூக பொரு ளாதார, அபிவிருத்தியுடன் தமக் கான கலை, கலாசா, பண்புகளுடனும், மேன்மையுடனும் வாழ வேண்டும். இதனை நோக்கிய எம் பயணத்தில் சமூக விடுதலையை விரும்பும் அனைவரும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாய மாகும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரம்பரியம், மக்களின் ஒற்றுமை பற்றிப் பேசிய இவர் இப்போது நவபாரம்பரியத்துக்குள் புகுந்துள்ள நிலையில் தனது நடனங்களை மறைக்க மக்கள் மத்தியில் தோன்றி தன்னை வேறு விதமாக அறிமுகப்படுத்த முற் படுகிறார்.

31.12.2011 நவபாரம்பரியம்

2012 புதுவருடத்தை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் இப்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சராகஉள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தனது பிரத்தியேக செயலாளருடன் நடனமாடி அசத்தினார். இது மட்டுமல்ல அண்மையில் அமைச்சர் மில்ரோய்வீட்டில் நடைபெற்ற நிகழ்விலும் கருணா கலந்துகொண்டு தனக்குரியதான நடனத்தை ஆடினார். அடிக்கடி வெளிநாடு செல்லும்போதும் இவர் தனது களிப்புக்குக் குறைவைப்பதேயில்லை. இப்போது கண்டவர்களுடனும் கட்டிப்பிடி யாட்டம் போடுகிறார் அம்மான்.

10.01.2012 பாரம்பரியம்

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் நாம் சிறு பராயத்தில் கண்ட பாரம்பரியங்கள் பழக்க வழக்கங்களைக்கூட இன்று மறக்க வைத்திருக்கிறது என மட்டக்களப்பு, சந்திவெளியிலுள்ள வேல்தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது கருத்தை வெளியிட்டார்.

முன்பெல்லாம் தென்னை வீட்டில் பாளை போட்டுவிட்டதென்றால் அதனை ""ஒரு பெண் வயதுக்கு வந்த சிறப்பான தினம்'' என்று கொண்டாடுவார்கள். ஆனால் அவற்றினையெல்லாம் தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர் என்றும் அவரது உரை அமைந்திருந்தது.

கருணாவின் புதிய ஞானம் எதைச் சொல்கிறது? சுபோகத் திற்காக ஒரு இனத்தைக் காட்டிக் கொடுத்த மனிதர் இன்று நியாயங்கள் பற்றியும் பாரம் பரியங்கள் பற்றியும் பேசுவது எந்த அளவில் ஏற்றுக்கொள்ளத் தக்கது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாது.

மறுபுறத்தில் இருப்பிடமற்ற மக்களும், ஒருநாளில் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே அல்லல்படும் மக்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு பசிபோக்க யாருமற்ற நிலையில் நாணற்புற்கள் மக்களின் மூக்குக்குள் நுழைவது புதிய அரசியலாகியுள்ளது.

நடப்பவற்றையும், நடக்க இருப்பவைபற்றியும் பேசுவதுகூட அர்த்தமற்றதாகிவிடுமளவுக்கு மனிதர்களின் சஞ்சரிப்பு தோன்றி யுள்ளது. எல்லாம் ""ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி'' கதையாகவே நிகழ்கிறது. கலிகாலத்தில் யார் என்ன செய்து விடமுடியும்???


நன்றி். உதயன் சூரியகாந்தி(15.01.2012)

Friday, January 13, 2012

நோய் மீதே வாழ்வு

இறுதிப்போர் முடிந்து மூன்று வருடங்களை எட்டும் நிலையில் வன்னியில் புதிய வடிவங்களில் மக்கள் வாழ்க்கையுடன் போரட வேண்டியவர்களாகவே இன்னமும் இருக்கின்றனர். வாழ்வியல் ரீதியாக இந்த மக்கள் எதிர்நோக்கியுள்ள பல்வேறுவகையான நெருக்கடிகள், இருப்புக்கான கேள்விக்குறிகளை ஏற்படுத்திவருகின்றன. போரின் கோர முகங்களை மறந்து புதியவாழ்வுக்குள் நுழைய எத்தனிக்கும் ஒரு சமூகத்துக்கு, அதிலிருந்து மீள முடியாத அளவுக்கு அரசின் அபிவிருத்திப் பணிகள் இருக்கின்றன.

இன விடுதலைக்காகப் போராடிய அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களும் திட்டமிட்டு பழிவாங்கப்படும் சூழலில் வாழவேண்டியவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். போரின்போது உறவுகள்,உடமைகளை இழந்து உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் வன்மப்பிடியிலிருந்து எங்களை விட்டுவிடுங்கள் என்ற நிலைப்பாட்டுடன் வாழ்கின்றனர்.

போரின்போது மக்கள் எதிர்கொண்ட நிலைமைகள் இப்போது அவர்களுக்குத் தாக்கத்தைக் கொடுத்துவருகின்றன. குறிப்பாக இடவசதி,போதிய காற்றோட்டம்,சுத்தமான குடிதண்ணீர்,சுகாதாரமான கழிப்பறைவசதி,போசாக்கான உணவு போன்ற அடிப்படை தேவைகள் இறுதிபோர் நடைபெற்றபோது மக்களுக்குக் கிடைக்கவில்லை.

போரின்போது கொல்லப்பட்டவர்களின் உடலங்களைச் சுகாதாரமான முறையில் அடக்கம் செய்ய மக்களுக்கு அவகாசம் இருக்கவில்லை. தமக்குமுன்னால் இறந்தவர்களை உறவுகள் தாம் இருந்த பங்கருக்குள் போட்டு மூடிவிட்டு வேறு இடத்துக்கு நகர்வது மட்டுமே இயலுமான ஒன்றாக அப்போது இருந்தது. கைவிடப்பட்ட உடலங்களை காகங்களும் நாய்களும் உண்ணவேண்டி ஏற்பட்டது. அழுகிய உடல்களின் நாற்றமும், நச்சுகுண்டுகளின் புகைகளும் மக்களின் சுவாசமாக மாறின.

வன்னிப்போரில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களான கிளஸ்ட்டர் குண்டுகளும்,நச்சுக்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன.

போரில் இருந்து மீண்டு நலன்புரி முகாம்களுக்கு சென்ற மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டனர். போர்முடிந்து மக்கள் மீளக்குடியமர்ந்துள்ளநிலையில் இப்போது புதிய நோய்கள் பரவ ஆரம்பித்து மக்களை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியள்ளன.

ஏற்கனவே தொற்றுநோய்கள்,ஆபத்தான நோய்கள் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டிய நிலையில் மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டப்பட்டது. குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டவர்களில் அனேகமானவர்களுக்குக் காசநோய்ப் பாதிப்பு ஏற்பட்டிருப்பது வைத்திய அரிக்கைகளில் புலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இப்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு வகைக் காய்ச்சலினால் கடந்த இரு வாரஙகளில்(01.01.2012)மட்டும் ஏழு பேர் மரணமாகியதுடன், இருவர் யாழ்.போதனாவைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டனர். சுவாசத்துடன் தொடர்புபடும் இந்த காய்ச்சல் சகல வயதினரையும் தாக்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு அல்லது மூன்று நாள் காய்ச்சலுடனேயே இந்த மரணம் நிகழ்வதால் காய்ச்சல் ஏற்பட்ட உடனேயே வைத்தியர்களை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வன்னியில் உள்ள பல மருத்துவமனைகள் போதிய அடிப்படைவசதிகள் இன்றியே இயங்கிவருகின்றன. இதனால் அந்த மருத்துவமனைகளில் மக்கள் சாதாரண காய்ச்சலுக்கு கூட மருந்தைப் பெறுவது சிரமமாக உள்ளது. இவ்வாறான நெருக்கடிகளுக்குள் மக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தொடர்ந்தும் போராடவேண்டியுள்ளது.

நன்றி் உதயன்,சூரியகாந்தி-(08.01.2012)

Wednesday, December 7, 2011

முடிந்தால் ஐ.நாவில் மனசாட்சியை மட்டும் பேசுங்கள் அம்மணி

essay
அன்புடன் அம்மையாருக்கு!
தமிழ்மகன் எழுதும் மடல் இது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உண்மைகளை மறைக்கும் இலங்கை அரசின் குழுவில் தாங்களும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எச்.எம்.சார்ஸ்சும் அங்கம் வகிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ்மக்கள்,அரச தரப்பினரிடம் இருந்து தமக்கு எதுவிதமான, முன்னேற்றகரமான பலா பலன்களும் கிடைக்கவில்லை. அதாவது மனித உரிமைப் பாரபட்சங்கள் நீக்கப்படவில்லை, அச்சுறுத்தல் சூழல் போக்கப்படவில்லை, அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை, இன முரண்நிலைக் கட்டமைப்பில் மாற்றம் நிகழவில்லை என்ற கருத்துக்களை நிலை நாட்டியுள்ள காலம் இது.

அவர்கள் வெளிப்படுத்தியுள்ள, வெளிப்படுத்தும் பாரபட்சமற்ற அனுபவத்தின் அடிப்படையிலான, உரிமைவெளிப்பாட்டு அடிப்படையிலான கருத் துக்களைச் செவிமடுத்து, பொறுப்புடன் அவதா னித்து அந்த மக்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதே இப்போதுள்ள தமிழ் அரசியல் வாதிகளதும், அரச அதிகாரிகளதும், பொதுநல அமைப்புக்களதும் கட்டாயக் கடமையாக உள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் தாங்கள் மக்களது உணர்வுகளுக்கும், அவர்கள் அனுபவித்துவரும் துன்பங் களுக்கும் (குறிப்பாக வன்னி மக்கள்)பதில் கூறும் வகையில் இனிவரும் நாள்களிலாவது உங்கள் தார்மீக,பொறுப்புடன் கூடிய, நடுநிலையான செயற் பாடுகளைச் செய்வீர்கள் என எண்ணுகின்றோம்
ஏற்கனவே இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் படலாம் என எதிர்பார்க்கப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க அரச தரப்பிலிருந்து விசேட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்பட்ட காலப்பகுதியில் மனித உரிமைகள் அமைச்சராக இருந்து வெளியுலகுக்கு உண்மைகளை மறைத்துவந்த, இப்போது பெருந்தோட்டத்துறை அமைச்சராக உள்ள மஹிந்த சமரசிங்க தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நீர் வழங்கல் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, சூழல் அபிவிருத்தி அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா (இவர் யுத்த காலத்தில் தகவல் ஊடகத்துறை அமைச்சர்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஆகியோரும் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கூட்டத்தின்போது இலங்கைக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் எனவும், அதனை முறியடிக்கக் கூடிய வகையில் இந்தக் குழுவினர் செயற்படுவர் எனவும் அறிய முடிகின்றது.
இந்தக் குழுவினருடன் போதாக்குறைக்குத் தமிழ் மக்களைப் பிரதிபலிக்கும் வகையிலான அரசுக்குச் சார்பாக பிழைகளை நியாயப்படுத்தக் கூடிய சிலரையும் அங்கம்வகிக்கச்செய்து தம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை பொய்யாக்க அரசு முயன்று வருகின்றது.இதற்காகத் தம்மால் நினைத்தபாட்டுக்கு அசைக்கக்கூடிய கைப் பொம்மைகளை அரசு தேடிவருகிறது. இந்த வலைக்குள் இப்போது உங்கள் பெயரும் அடங்குவதாக அறிகின்றோம்.
அரச கட்டுப்பாட்டில் இப்போதுஇதற்குச் சாதகமாக அசையக்கூடிய நிலையில் அரச தரப்பினரால் தாங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்பது வேதனை தருகிறது.அண்மையில் இராணுவத்தினரால் கொழும்பில் நடத்தப்பட்ட போர் அனுபவப் பகிர்வு தொடர்பான சர்வதேசக் கருத்தங்கில் தமிழ்மக்களுக்கு ஒவ்வாத சில கருத்துக்களை தாங்கள் வெளிப்படுத்தியி ருந் தீர்கள் என்று ஊடகங்கள் வாயிலாக அறிய முடிந்தது.
தாங்கள் அதன்போது ஆங்கிலத்தில் எழுதி வாசித்த சில கருத்துக்களை இங்கே நினைவு கூருகின்றேன்.
முல்லைத்தீவில் அரச அதிபராக நான் செயலாற்றிய காலப்பகுதியில் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர்.போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங் களில் பொதுமக்களின் உணவு உள்ளிட்ட அடிப் படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரச அதிகாரிகள் என்ற வகையில் நாங்கள் பெரும் சிரமப்பட்டோம்.
இந்தக் காலப்பகுதியில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அரசிடம் கோரிக்கைகளை முன் வைக்கும் போதும் நான் விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டலுக்கு உள்ளானேன்.வடபகுதி மக்களை விடுதலைப் புலிகள் பணய மாக வைத்துக் கொண்டே போரை நடத்தினர். இந்த மக்களைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு பாதுகாப்புப் படையினர் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பாதுகாப் புப் படையினர் எவ்விதத்திலும் பொதுமக்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்த வடபகுதி மக்களை பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
அவர்கள் சட்டரீதியாகவும், நாகரிகமான முறையிலும் தமது மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து விடுதலைப் புலிகளிடம் பணயக் கைதிகளாக இருந்த அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தனர். விடுதலைப் புலிகளின் அச்_றுத்தலில் இருந்து அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்தமைக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் பாதுகாப்புப் படையினருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் எந்தளவுக்குப் பொதுமக்களைத் துன்புறுத்தினார் கள் என்று எனக்கு நன்கு தெரியும். தற்போது, விடுதலைப் புலிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்ட வடபகுதி யில் தமிழ் மக்கள் சகல வசதிகளுடன் சுதந்திரமாக வாழ்கின்றனர். போருக்குப் பின்னரான மீள்குடியேற்றம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டுமானங்கள் அனைத்தும் அரசால் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள், பாதுகாப்புப் படையினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை மறந்து விடமுடியாது'' என்று தெரிவித்திருந்தீர்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. அவற்றில் மிகைப்படுத்தல்கள் இருக்கக்கூடும். ஆனாலும் நீங்க சொல்ல வந்த உள்ளடக்கம் இதுபோன்ற ஒன்றே என்பதையும் அவ்வாறு இல்லாத ஒரு அறிக்கையை நீங்கள் வழங்க முடியாத சூழல் உங்களுக்கு இருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.இதுபோன்ற கருத்தை நல்லிணக்க ஆணைக்குழு வின் முன்னிலையில் சாட்சியம் அளிக்கும் போதும் தாங்கள் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.
புலிகளின் கட்டுப்பாட்டில் அம்மையார்
அதேவேளையில் இன்னுமொரு விடயத்தை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.வன்னியில் போர் உக்கிரமடைந்த காலம் அது. முல்லைத்தீவு நகர்பகுதிமீது நள்ளிரவு வேளை இராணுவத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். மருத்துவமனை, தங்களது இல்லம் போன்ற பகுதிகளில் ஷெல்கள் பரவலாக வீழ்ந்து வெடித்தன. இதில் தாங்கள் உட்பட 16பேர் காய மடைந்தனர். சம்பவத்தில் ஒருவயதுக் குழந்தை யும் பலியாகியது. முல்லைத் தீவு மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் \ண்முக ராஜாவின் மனைவி திருமதி ரேணுகாவும் காயமடைந்தார்.
தாக்குதலில் கையில் காயமடைந்த நீங்கள் அந்த வேதனையுடன் சம்பவ இடத்திலிருந்து அழுதழுது விடுதலைப் புலிகளின் ஊடகங்களுக்கும் ஏன் பி.பி.சி செய்திச் சேவைக்கும் பேட்டி வழங்கியிருந்தீர்கள்."அதில் சிங்கள இராணுவம் திட்டமிட்டு தமிழ்மக்களின் வாழ்விடங்கள் நோக்கி கண் மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளது. அரசு பிரதிநிதியான எனக்கே பாதுகாப்பில்லை. எவ்வாறு மக்களைப் பாதுகாப்பது'' என கண்ணீர் மல்ல கதறினீர்கள்.
அப்போதுதான் உங்கள் முன்பாக கமெராவுடன் நின்று கொண்டிருந்தேன். அப்படி உங்களைப் பார்த்து, நீங்கள் பேசியதைக் கேட்ட எனக்கு இப் போது நீங்கள் கூறுபவற்றை ஏற்க முடியாமல் இருக்கிறது. எனினும் வன்னியிலும் நீங்கள் பணி யாற்றிய போது இரு தரப்புகளாலும் உங்களுக்கு இருந்த நெருக்கடிகளை ஒதுக்கிவிட முடியாது தான். உண்மையில் உங்களது இந்த இரு வேறு பட்ட நிலைகளுக்கு காரணம் நீங்கள் ஓர் அரச நிர்வாகப் முகவர் என்பதும் புரிகிறது.
உங்களது பதவியையும் நம்பகத்தன்மையையும் பாதுகாப்பையும் தக்கவைப்பதற்காக இந்த இரு நிலைப்பாடுகளை நீங்கள் எடுக்க வேண்டி இருக்கலாம்.இவை அனைத்தும் உள்நாட்டுக்குள் முடிந்து போனவை. விடுதலைப்புலிகளது கட்டுப்பாட்டில் வன்னியில் மக்கள்இருந்தபோது அரச பிரதிநிதியாக தாங்கள் இருந்தாலும் விடுதலைப்புலிகளது செயற் றிட்டங்களையே அமுல்படுத்தவேண்டிய நிர்ப்பந் தம் இருந்தது. அதுபோல இப்போது அரசின் நேரடி நெறிப் படுத்தலின் கீழ் நிர்வாகப் பொறுப்புடன் தாங்கள் உள்ளீர்கள். இறுதி போர் நடந்த காலப்பகுதி யில் வன்னியில் நீங்கள் இருந்தீர்கள் .
இவ்வாறான சாதக நிலைகளைப் பயன்படுத்தி அரசதரப்பினர் உங்களை இலங்கைக்கு சர்வ தேச மட்டத்தில் அதி கூடிய நெருக்கடிகள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஐ.நா. மனிதஉரிமைகள் கூட்டத்தொடரிலும் ஒரு முக்கிய சாட்சியாகப் பயன்படுத்த முயல்கின்றனர்.
கூட்டத்தொடரில் நீங்கள் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை மட்டுமே வாசிப்பீர்கள் என எதிர் பார்க்கப்பட்டாலும் சில வேளைகளில் இலங்கை அரசுமீது கூடுதல் நெருக்கடிகள், குற்றச்சாட்டுக்கள் முடுக்கிவிடப்பட்டால் அதை முறியடிக்க உங்களை போர் வலயத்தில் கடமையாற்றிய தமிழ்ப் பிரதிநிதி என்ற அடிப்படையில் நேரடிச் சாட்சியாக அரசு பயன்படுத்தலாம்.
இங்குதான் பிரச்சினை ஏற்படுவதற்கு அதாவது தமிழ்மக்களது நியாயமான கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதற்கு நீங்கள் ஒரு பயன்படுத்தப்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மனுநீதிக்கான சாட்சியாக இருப்போம்
இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் மக்களாகப் பார்க்கப்படுவதையும் அவர்களது வாழ்வுரிமைகள் மறுக்கப்படுவதையும் உலக நாடுகள் பல இன்றுவரை ஒரு பொருட்டாக எடுத்து செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு தேவை. அவர்களுக்கு இதுவரை இலங்கை அரசு இழைத்த கொடுமைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு நீதி நிலை நாட்டப்பட வேண்டும். அதற்காக நீதியான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றே சர்வதேச சமூகம் இலங்கையை நெருக்க டிக்குள் தள்ளிவருகிறது.
இதற்காக ஐ.நா சபையின் அறிக்கை (40 ஆயிரத்துக்கும் மேல் பொதுமக்கள் கொல்லப்பட் டுள்ளனர்) வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக் களது நேரடி சாட்சிப் பதிவுகள், அங்க அவயவங்களை இழந்து வாழும் மக்களது பதிவுகள், விதவைக் குடும்பங்களது பதிவுகள் பெற்றோரை இழந்த சிறுவர்களது பதிவு தொகைமதிப்பீடுகள், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக காட்டப்படும் புகைப் படங்கள், வீடியோக்கள், இன்றுவரை அதிர்ச்சியூட்டும் வகையில் தகவல் வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் என பல நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நீங்கள் ஐ.நாவின் மனித உரிமைகள் மாநாட்டில் கூறுவதெல்லாம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதைப் பாதித்து விடக் கூடாது என்பதே எனது வேண்டுதல். வடக்கு கிழக் கில் தமிழ் மக்கள் நீண்ட காலமாகப் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு அரசியல் ரீதியில் நிரந்தரமான நெருக்கடி உள்ளது. அவர்களதுவாழ்வுரிமைகள் மறுக்கப்படுகின்றன. இப்போதும் மக்கள் நெருக்கடியில்தான்வன்னியில் இறுதிப் போரின்போது பெருமள வான மக்கள் கொல்லப்பட்டனர், மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்றன, பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர் என்று நேர் அனுபவ சாட்சிகளும், ஆதார ஆவணங்களும் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
அரசு சொன்ன வாக்குறுதிகள் எவையும் பூரணப் படுத்தப்படவில்லை. வன்னியில் மக்கள் பலர் இன்னும் அடிப்படை வசதிகளற்று நெருக்கடிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.இவையெல்லாம் மனித தர்மத்தின் அடிப்படையில் பார்க்கப்படவேண்டும். காலம் காலமாக நெருக்கடிக் குள் வாழும் தமிழ் மக்களது துயர வாழ்வு அகல வேண்டும். அவர்கள் உலகத்தில் உள்ள எல்லா மக்களையும் போல சுதந்திரமாக வாழவேண்டும் என்ற மனப்பாங்குடன் செயலாற்றவேண்டும்.இவற்றை மனதிலிருத்தி மனச்சாட்சியுடன் பேசுங்கள். தமிழினம் உங்களையும் நம்பி இருக்கிறது.
நன்றி உதயன்
http://184.107.230.170/~onlineut/News_More.php?view=essay_more&id=2811620808885073

Thursday, December 1, 2011

கார்த்திகை இறுதியில்ஆலயங்களைகாவல் செய்த ஆ(சா)மிகள்


அன்றும் வழமைபோல் மாலை 6 மணிக்கு உணவகத்துக்குபபுறப்பட்டேன். மழை இருட்டு அந்த பொழுதை இரட்டிப்பாகக் காட்டியது. போகும் வழியில் பிள்ளையார் கோயில். கோயிலின் தெற்குவாசல் திறந்திருந்தது. வழமையாக நான் அந்த வழியாகப் போகும் நாள்களில் மலையில் வாயில் திறந்திருப்பதில்லை. வழமைக்கு மாறாக அன்று வாயில் திறந்திருப்பதற்கான காரணம் புரியாது மழை இருட்டில் உற்றுப் பார்த்த எனது கண்களுக்கு இரண்டு உருவங்கள். ஆவை இராணுவ சீருடைஇதேழில் தொங்கவிடப்பட்ட துப்பாக்கியுடன் தென்பட்டன.

சமயாசாரப்படி இந்துக் கோயில்களுக்குப் போவதாயின் ஆண்கள் மேலங்கியை கழையவேண்டும். பாதணி தரிக்கமுடியாது. இதன் காரணமாகவே கோயில் வாயிலில் நின்று கும்பிட்டுவிட்டு இறைவனின் எல்லா வரங்களையும் பெற்றுவிட்டதாகப் பெருமிதப்பட்டு கதை சொல்லும் எனக்கு பிள்ளையார் கோயில் சம்பவம் வியப்பாக இருந்தது.

எனது மனதுக்குள் எண்ணிக்கொண்டேன், சிலவேளைகளில் இப்படியும் இருக்குமோ என்று. யுத்தம் முடிந்து இரண்டுவருடங்கள் அகிவிட்டன. விடுதலைப் புலிகள் பற்றி உள்ளுர் கதைகள் வருவதில்லை. புலிகள் இலங்கையில் தமிழ் இனத்தின் விடுதலைக்காப் போராடியதற்கான பல தடையங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் இறந்தவர்களைப் புதைத்து வைத்த இடங்களையும் மிச்சமில்லாமல் அழித்துவிட்டோம். இதனால் காலம் காலமாக தமிழ் மக்கள் அனுஷ்டித்துவந்த மாவீரர் தினத்தை மறந்து விடுவார்கள். எனவே தமிழ்மக்கள் மறந்துவிடாமல் போரில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவுகூரட்டும் என்ற ஏற்பாடுதான் இது என்று.

கார்த்திகை 27 தமிழ் மக்கள் மனங்களை விட்டு என்றுமே அகலாத நாள். மலரெடுத்து மாலை கட்டி பூசிக்கும் நாள். இறந்துபோன தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் ஒரு புனிதமான நாள். ஆனாலும் அந்த நாளை வெளிப்படையாக கொண்டாடுவதற்கு இலங்கையில் தடை. 2009 யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட அடுத்த கணமே வன்னிப்பகுதியில் காணப்பட்ட தமிழ் பண்பாட்டை எடுத்தியம்பும் கட்டடங்கள்இ விடுதலைப் போரட்டத்தை சித்திரிக்கும் நினைவிடங்கள்இதூபிகள் சிலைகள் போன்ற எல்லாமே அழிக்கப்பட்டன. அவற்றுடன் அங்கு போராட்டத்தில் உயிரிழந்த போராளிகளின் உடல்கள் விதைக்கப்பட்ட துயிலுமில்லங்களும் தரைமட்டமாக்கப்பட்டன.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 57 ஆவது பிறந்ததினம்இமற்றும் மாவீரர் தினம் இஅதனை ஒட்டிய மாவீரர் வாரம் என்பன உலகம் பூராகவும் அனுஷ்டிக்கப்பட்டன. இந்த கொண்டாட்டங்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களால் கொண்டாடப்படலாம் என்ற அச்ச நிலை இராணுவத்தினர் மத்தியில் ஏற்பட்டது. இதனால் வழமையைவிடவும் வடபகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்பட்டன.இதன் ஒரு அங்கமாகத்தான் ஆலயங்களுக்கு படைக்காவல் வழங்கப்பட்டது.

வன்னியில் அந்தணர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் மணி ஒலி எழுப்புவதற்கும் அந்தணர்அல்லாத பூசகர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் பூசை செய்யவும் மணி ஒலிப்பதற்கும் இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டது. 25இ26இ27 ஆகிய தினங்களில் வன்னியில் உள்ள சகல ஆலயங்களிலும் பூசைகள் நடத்தவும் மணிகளை ஒலிக்கவும் கூடது என படையினர் உத்தரவிட்டிருந்தனர். ஆனால் அந்தணர்கள் பூசை செய்யும் ஆலயங்களில் பூசை இடம்பெறாவிட்டால் கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கட்டாய நிலைமை தோன்றுமெனச் சுட்டிக்காட்டப்பட்டதால் அவற்றில் பூசை செய்வதற்கு பின்னர் படையினர் அனுமதி வழங்கினர் இ எனினும் மணி ஒலி எழுப்புவதற்கு அந்தந்த ஆலயங்களில் தடை விதிக்கப்பட்டது.

யாழ்பாணம் காரை நகரில் உள்ள ஆலயங்களில் மாவீரர் வாரத்தில் மணி ஒலி எழுப்பக் கூடாது என்று படையினர் அறிவித்திருந்தனர்.இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பு வடக்குமுழுவதும் பிறப்பிக்கப்பட்டது.இதுபோலவே யாழ்ப்பாணம்இ கிளிநொச்சிஇ முல்லைத்தீவுஇ வவுனியா போன்ற இடங்களில் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகளை அதிகரித்திருந்ததுடன்இ ரோந்து நடவடிக்கைகளிலும் சிறு சிறு குழுக்களாக இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

ஆலயங்களுக்கு அருகில் பகலிரவாக இரண்டொரு இராணுவத்தினர் காவலுக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். அதிலும் 27ஆம் திகதி மாலை 6 மணி ஐந்து நிமிடம் என்பதை படையினர் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருந்தனர். ஆலய மணியை யாரும் அசைத்துவிடாமல். விடுதலைப்புலிகளின் தலைவர் தமிழ்தேசிய மாவீரர் நாள் உரை நிகள்த்தியதும் மணிஒலி எழுப்பப்பட்டு அதன்பின்பு 06.06க்கு சுடர் ஏற்றும் புனித நேரமே அது.

யாழ்.பல்கலையை சல்லடைபோட்ட
படையும் பொலிசும்

தமிழ் தேசியத்தின் எழுச்சி என்பது பல்கலைக்கழகத்தை சார்ந்தது.இது வரலாற்று உண்மை.ஆரம்பத்தில் போராட்டத்தை முன்னெடுத்து சென்ற பலர் யாழ். பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்களே.போராட்டவளர்ச்சியின் ஒவ்வொரு பரிணாமத்திலும் அதன் பங்கு காத்திரமாக இருந்தது. போங்குதமிழ் எழுச்சியின் ஊடாக தமிழ் மக்களிப் பிரச்சினைகளை உலகுக்கு எடுத்துகூறியதன் மூலம் யாழ்.பல்கலைக்கழகம் போராட்டத்தை புதிய வடிவத்துக்கு மாற்றியிருந்தது. இன்றுவரை உலகத் தமிழர்களால் ஈழ மக்களுக்கு நீதி கேட்டு நடத்தப்படும் போராட்டங்களுக்கு புதிய வடிவத்தை பொங்கு தமிழ் எழுச்சி வழங்கியது. இதற்காக யாழ் பல்கலைக் கழகம் நிறையவே விலையும் கொடுத்திருக்கிறது.

ஆனாலும் 2009 யுத்தமுடிவின் பின்னர் காட்டிக் கொடுப்புக்களும் துரோகத்தன்மையும் இந்த சமூகத்தில் காலூன்றி உணர்வுகளை கொச்சைப்படுத்த ஆரம்பித்தது.ஆனாலும் உண்மையான உணர்வுகளை எலராலும் விலைபேச முடியாது எப்பதை பல்கலைக்கழகம் எடுத்துச் சொல்ல தவறவும் இல்லை.

மாவீரர் தினத்தையொட்டி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச் சுவரெட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டிருந்தன. துரதிஷ்டம் அந்த செய்தி படைப்புலனாய்வாரள்களுக்கு பல்கலைக்கழகத்திலிருத்தே அறிவிக்கப்பட்டது. உடனே நான்கைந்து மோட்டார்சைக்கிளில் வந்த முகமூடி கொள்ளையர்கள் மாணவர் பொது அறைக்கு கீழ் இருந்த விளப்பர பலகைக் கண்ணாடிகளை அடித்து நொருக்கிவிட்டு அதில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை எடுத்து சென்றனர்.

மறுநாள் பல்கலைக்கழகம் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.பல்கலைக்கழக சமூகத்தினர் மாவீரர் தினம் கொண்டாடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் அதனால் பல்கலைக்கழகத்தை சோதனையிடப்போவதாகவும் கூறி நுழைந்த பொலிஸார யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு மற்றும் வளாகத்திலுள்ள மண்டபங்கள்இ விரிவுரை அறைகளைச் சோதனையிட்டனர்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று முற்பகல் கூடிய மாணவர்களில் ஒரு பகுதியினர் தமிழினத்தின் விடுதலைக்காக போராடி வீரச்சாவடைந்த போராளிகளுக்காகவும்இ போரில் மரணமடைந்த மக்களுக்காகவும் மௌன அஞ்சலியைச் செலுத்தினர் என்பதே பரவிய தகவல்”


வன்னியில் எதுவாயினும்

இராணுவத்தின் அனுமதி தேவை

இலங்கை அரசு விடுதலை புலிகளை தோற்கடித்து தமிழ் மக்களை பயங்கர வாதத்திடம் இருந்து மீட்டெடுத்ததாக பிரசாரப்படுத்தி அவர்களை தொடர்ந்து அடிமைகளாகவே பயன்படுத்தி வருகிறது. மண் குடிசை என்றாலும் தூய்மையாய் வாழ்த வன்னி மக்களை வானம் பார்த்து வாழவைத்து வேடிக்கை பார்க்கிறது அரசு.

போதாக்குறைக்கு அவர்கள் தமது பண்பாட்டை பிரதிபலிக்க கூடிய விழாக்களையும் நிகழ்வுகளையும் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கார்த்திகை “விளக்கீடு”திருநாளில் தீபம் ஏற்ற தடைவிதிக்கப்படுகிறது.பொது இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி பெற உத்தரவிடப்பட்டுள்ளது.பொது நிகழ்வுகளுக்கு அழைக்கபடவேண்டியவர்கள் யார் யார் எனப் பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளது.வெளியிடப்படும் நூல்களாயினும் அதில் இடம்பெறும் அம்சங்கள் முற்கூட்டியே கோரப்படுகின்றன. அரசுக்கு சார்பற்ற மாற்றுகருத்துகள் அடங்கியவற்றை தவிர்க்குமாறு வற்புறுத்தப்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்களது அபிலாசைகளையும் உணர்வுகளையும் எந்த சந்தர்பத்திலும் யாராலும் மாற்றி விடமுடியாது.அது காலத்துக்கு காலம் வெவ்வேறு வடிவங்களில் முனைப்புப் பெறும்.

இதுபோலவே உணர்வுள்ள நிகழ்வுகளும் ஏதோ ஒரு மூலையிலாவது கொண்டாடப்படும்.அதை யாரும் கண்டுவிடவோ தடத்துவிடவோ முடியாது. இந்த மாவீரர் தீனமும் பிரத்தியோ இடங்களில் கொண்டாடப்பட்டே இருக்கிறது..மெழுகுவர்த்திகள் தமது கண்ணீரை வடித்தே இருக்கின்றன.உலகெங்கும் அந்தநாள் உச்சரிக்கப்பட்டே உள்ளது. ஏன் நாட்டின் ஜனாதிபதியும் மாவீரர் நாளை நினைவு கூர்ந்து தெற்கின் அதிவேக நெடுஞ்சாலையை திறந்துவைத்தார் மாவீரர் தினத்தில்.நவம்பர் 27 ஐ நினைவுகூர்து உரையும் நிகழ்த்தினார்.


நன்றி "உதயன்"(30.11.2011)


Wednesday, September 28, 2011

சிலருக்கு ஆதாரம் பலருக்கு சேதாரம்


வன்னியில் போர் முடிவுக்கு வந்து இரண்டரை வருடங்கள் கழியும் நிலையில்மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்திபற்றியும் அரசியல் பற்றியும் ஆரவாரப்படும் அரசத் தரப்பினர் தற்போது இனக்கலப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரசிடமும்,வேறு உதவும் அமைப்புக்களிடமும் உதவியை எதிர்பார்த்திருந்த மக்கள் அவை முழுதாக கிடைக்காத நிலையில் தமது சொந்த முயற்சிகளை ஆரம்பித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த எத்தணித்துவருகின்றனர்.
ஒருபக்கம் நல்ல முயற்சிகள் நடைபெற மறுபக்கத்தில் தீய,சமூகத்துக்கு ஒவ்வாத செயற்பாடுகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது.அதாவது சிலர் தமக்கான வாழ்வாதாரத் தொழில் எனக்கருதிச் செய்யும் தொழில் பலரது இறப்புக்களுக்கும் குடும்பத்தகராறுகளுக்கும் பிறழ் நடத்தைகளுக்கும் காரணமாக அமைவதனையே காணக்கூடியதாக உள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் சட்டவிரோத மது உற்பத்தி தொடர்பான வழக்கொன்று விசாரிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படாத நாள் இல்லையென்றாகிவிட்டது.
இதில் சுவாரஷயமானதும் வேதனையானதுமான விடயம் என்னவென்றால் சட்டவிரோத மதுபான உற்பத்திக் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்படுபவர் தீர்ப்பறிக்கை சமர்ப்பித்த உடனேயே குற்றப்பணத்தை செலுத்தி சாதாரணமாக வெளியேறிவிடுகிறார்.அதுமட்டுமல்ல தான் இழந்துவிட்டதாகக் கருதும் அந்தப் பணத்தை வீடு சென்றதும் ஒரு நாளிலேயே உழைத்தும் விடுகிறார்.
காச்சுவதுக்கு மனமிருந்நால் காச்சிவிடலாம்
குடிப்பதுக்கு மனமிருந்தால் குடித்துவிடலாம்
கேட்பதற்கு யார் உள்ளார்?
இதுதான் வன்னியில் கசிப்பு உற்பத்தியாளர்களதும் வாடிக்கை நுகர்வோரதும் நிலைப்பாடாக உள்ளது.
கையும் களவுமாக பிடிபடும் ஒருசிலரே நாளாந்தம் நீதிமன்றுக்கு வருகின்றனர்.மற்றயபலர் சூழ்ச்சியாகத் தப்பித்து கொள்கின்றனர்.
ஒரு பின்தங்கிய கிராமம்.ஒதுக்குபுறமாக தனிமையில் உள்ள ஒரு வீடு.ஆனாலும் கொண்டாட்ட வீடுபோல ஆண்களால் மாலைப் பொழுது நிரம்பி வளிந்துகொண்டிருக்கும்.ஊரில் பலருக்கு அங்கு கசிப்பு விற்பனையாவது தெரியும்.துணிகரமாக இந்த தொழில் செய்ய பின்புலத்தில் அதிகாரத் தரப்பின் ஆதரவு இருப்பதாக மக்கள் உணருகின்றார்கள். காரணம் அடிக்கடி அந்த வீட்டுக்கு அவர்கள் விருநதாளிகளாக வந்து போவதுதான்.
வன்னியில் தட்டி கேட்டும் சுதந்திரம் இருப்பதாக இல்லை. சிலவேளை சட்டங்கள் கூட மாறுகின்றன. அன்றும் அதுதான் நடந்தது.குறித்த வீட்டில் நடப்பதை பார்த்து எரிச்சலுற்ற இளைஞன் தனக்கு தெரிந்த வகையில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தான்.
பொலிஸார் ஒருவர் வந்தார் கசிப்பை படிப்பவர் போல உடனே வீட்டுக்ககுள் நுளைந்தார்.பையனுக்கு சந்தோஷம் என்ர முயற்சி கைகூடிவிட்டது என்று மகிழ்தான். ஐந்து நிமிடத்தில் பொலிஸ் வெளியில் வந்தது கூடவே அந்த வீட்டு பெண்ணும் வந்தார். அந்த இளைஞனைப்பார்த்து பொலிஸகாரர் சிரித்துவிட்டு நீபோ நான்பாக்கிறன் என்றாராம்.
வெளியில் வரும்போது அவரது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் போத்தல் ஒன்றும்,கையில் காசும் இருந்ததை தான் அவதானித்ததாக பையன் சொன்னான்.(வன்னேரிக்குளத்தில் சம்பவம்,அக்கராயன் பொலிசாரிடம் முறையிடப்பட்டது,நடவடிக்கை-நீபோ நான் பாக்கிறன்)

நடைபாதை கசிப்பு வியாபாரி- விசுவமடுவில் சம்பவம்

இரவு 7 மணியிருக்கும்.திருமண வீடு ஒன்றுக்காக மூன்று நண்பர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்சில் சென்று இறங்கி அவரது வவீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றனர்.
ஒரு கடை அருகில் முதியவர் ஒருவர் சைக்கிளை சாத்திவிட்டு இருந்தார்.பஸில் சென்ற அலுப்புக்கு ஒரு பியர் அடிச்சா கலியாணவீட்டில இரவு ஏதாவது வேலை செய்து கொடுக்கலாம் எனத் திட்டமிட்ட மூவரும் அந்த முதியவர் அருகில் சென்று ஐயா இங்க சாராயம் பியர் விக்கிற கடை இல்லையா என்று கேட்டனராம்.
அதற்கு அவர் இருக்குது தூரப் போக வேணும். ஆமிதான் விக்கிறான்.பொது ஆக்கள் அத விக்க முடியாதாம். இப்ப அங்க இருக்காது. முடிஞ்சிருக்கும். நான் ஒண்டு வைச்சிருக்கிறன் அடிச்சுப்பாருங்களன் என்றாராம்.
இவர்களுக்கும் அது என்ன என்ற ஆவல்,ஆனால் கசிப்புப்பற்றி தெரியும்.பாய்க்கில கசிப்பு வச்சிருன்னிறன் தம்பி.நல்லா ஏத்தும் கொஞ்சம் அடிச்சுப்பாருங்க என்றாராம்.இவர்களுக்கும் புது இடம். வேண்டாம் ஐயா எங்களுக்கு என்றுவிட்டு, திரும்பி விட்டனர். திருமணவீட்டில் வந்து இராணுவ சாராயக் கடைபற்றி விசாரித்தபோது,விசுவமடு தேக்கங்காட்டுப்பகுதியில் மலிவு விலையில் அவற்றைப் பெறலாம் என்று அறிந்து கொணட மூவரும் “அட இடம் தெரியாததால் சந்தர்பத்தை மிஸ்பண்ணிட்டம்” என்று கவலைப்பட்டனராம்.
என்னதான் இருந்தாலும் சில குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழிலாக கசிப்பை உற்பத்தி செய்து விற்பது, நாளாந்தம் கூலிக்கு மாரடித்துவிட்டு “உடற்களைக்கு கொஞ்சம் குடிப்பம்” என்று எண்ணி தினமும் கசிப்பை குடித்து படிப்படியாக அவர்களது ஆயுளைக் அவர்களுக்கு தெரியாமலேயே குறைத்து வருகின்றது.
தினமும் போதையில் வீட்டுக்கு செல்லும் கணவன்மார் தனது மனைவியை வாய்கு வந்தபடி ஏசுவது,அடிப்பது,சந்தேகம் கொள்வது,இவை மட்டுமா? தான் பெற்ற மகளை,வளர்க்கும் பேரப்பிள்ளையைக்கூட தனது வெறியுடன் கூடிய காம பசிக்கு இரையாக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
குற்றச் செயலைத் தடுப்பதற்கென்று வன்னியில் பணியிலுள்ளவர்கள்கூட இதுபோன்ற காரியங்களிலேயே ஈடுபடுகின்றனர்.அவர்களுக்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்களது பரிசுகள் சம்பளத்துக்கும் மேலாக அமைவதால் அதையெல்லாம் எப்படி அவர்கள் குற்றச்செயலாக உணர்ந்துகொள்வார்கள்?
ஒட்டுமொத்தத்தில் சிலரின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிப்பதாகவே நோக்கப்படும்.இது விடயத்தில் யார்தான் அக்கறை செலுத்துவரோ?போருக்குமுன் கௌரவமான தொழில் புரிந்த ஒரு குடும்பம் இப்போது குடும்பமாகச் சேர்ந்து கசிப்பு காச்சி விற்பதுக்கு யார் தான் காரணமோ?
நாளுக்குநாள் சீரளியும்,திட்டமிட்டு சிலரால் சீரழிக்கப்படும் சமூகத்தை காப்பாற்ற யார்வருவாரோ?

பிரசுரம்: சுடர் ஒளி வாரஇதழ் 25செப்ரெம்பர்-01ஒக்ரோபர்2011

Tuesday, November 10, 2009

விரக்தியில் தமிழினமும், விழா தேடும் கலைஞரும்…
[படம்] “ரோம் நகர் பற்றி எறிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் அதிகாரப் போதையை புரிந்து கொள்ள முடிகிறது.” கலைஞாரின் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ஈழத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் காப்பாற்றப்பட்ட மக்கள் எப்படிச் சிங்கள அரசின் முள்வேலி சிறைக்குள் ஆறு மாதத்திற்கு முன் வந்து சேர்ந்தார்கள் என்பது கலைஞாரின் குடும்ப செய்தி சேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்திருக்காது.
9 November 2009

Thursday, March 12, 2009

சிறுகதை “கடையடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்”


“யாரடா என்ர இடத்தில இருந்தது.இரண்டு நாள் வரேல்ல எண்டா சரி எல்லாம்” என்றபடியே வகுப்பறைக்குள் நுளைந்தான் றமேஸ். “ஓமடா நீ வீட்டில கிடந்திட்டு ஆடிக்கொருக்கா அமாவாளைக்கொருக்கா வருவ இதென்ன தோட்டமா” தோட்டம் செய்வது அவ்வளவு இழக்கனமோ தெரியவில்லைஇ வகுப்பு மெனிற்ரர் கேட்டார்.

மூன்று நாட்கள் பாடசாலைக்குச் செல்லாததால் வகுப்பு மெனிற்ரருக்கும் றமேஸிற்கும் வாக்குவாதம்.

இயற்கை எழில் கொஞ்சும் வயல் நிலங்களும் தோட்ட நிலங்களும் சேர்ந்த சிறிய கிராமத்திலஇ; ஒரு வறிய விவசாயிக்கு மூன்றாவதும் கடைசிப்பையனாகவும் பிறந்தவன் றமேஸ். எதுவோ தகப்பனின் உழைப்பாலும் தாயின் முயற்சியாலும் பாடசாலைக் கல்வியை தொடர்ந்தான்.
தந்தை கஸ்ரப்பட்டு உழகை;கக்கூடியவர்தான் ஆனால் உழகை;கும் பணத்தில் அரைவாசியை தன் உடல்அலுப்பைத் தீர்க்க எடுத்துவிடுவார்.மிகுதி அம்மாவின் கையில் சேரும். “இந்த மனுசன் திருந்தாது. எப்பவும்இப்படித்தான் வீட்டுக்கஸ்ரம் உணராததுகள்” தாய் பொறுப்புள்ளவளய்த்தான் இருக்க வேண்டும்.

றமேசின் தந்தைக்கு வயல் தோட்டம் என்று இருந்தாலும் நின்மதியாய் தொழில் செய்ய முதலீடு ஏதும் இருக்கவில்லை. ஏதோ தன் உழைப்புத்தான் முதலீடும் வருமானமும். அதனாலோ என்னவோ சிவலிங்கத்துக்கு வீட்டில் அக்கறையில்லை. அப்படிச் சொல்வதைவிட ஒரு விரக்தி நிலைதான் அது.
றமேஸ் பள்ளிப்பரவத்தில் சுட்டித்தனம் நிறைந்தவன். ஏடு தெடக்கிய அன்றே தன்னை சிவம் சேறின் மடியில் இருத்தியதற்காக தாய்க்கு வீட்டில் வந்து நல்ல அடி “ஏன் அவற்ற மடியில என்ன இருத்திநீங்க” என்று.

தாய் பார்வதி எப்படியாவது மகனைப் படிப்பித்து முன்னேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். காரணம் தகப்பன் ஒரு குடிகாரன் தான் எட்டாம் வகுப்புத்தான் படித்தவள். இருந்தாலும் குடும்ப வறுமை றமேஸின் கல்வியில் பல தடைகளைப் போட்டது.


றமேஸிற்கு பள்ளிக்குப்போவதைவிட தந்தையுடன் தோட்டத்துக்குப்போவதென்றால் நல்லவிருப்பம்;. காரணம் தனக்காக அப்பாவும் அம்மாவும் கஸ்ரபடுகிறார்கள் என்பதை நல்லாவே உணர்ந்திருந்தான். “அம்மா நான் இண்டைக்கு பள்ளிக்கூடம் போகேல்ல அப்பாவோட தோட்டத்துக்கு போகப்போறன்”என்றவாறு வீட்டுக்கு பின்புறமாகப்போனான் றமேஸ். “இல்ல ராசா நேற்ரும் ரீச்சர் கண்டு என்னத்தான் பேசினவா. அப்பாவோட நான் போறன். நீ பள்ளிக்கூடம் போ” என்றவாறே சிவப்பியில் கறந்து வந்த பாலை காச்ச ஆரம்பித்தாள்.

தாயின் உதவியுடன் 9ஆம் தரம் வரை வந்துவிட்டான். “அம்மா பாவம் எனக்hகக மாட்டுக்குப் பின்னால திரியிறா”இது தான் அவனது ஏக்கமாக இருந்தது. அதனால்த்தான் அடிக்கடி பாடசாலைக்குப்போகாமல் நின்று விடுவான். “அம்மா இண்டைக்கு மாடுகள நான் கொண்டு போறன்” என்றான். இல்ல இல்ல எனக்குத்தெரியும் அது நீ நிக்கவேண்டாம்” “அப்பிடி என்றால் பள்ளிக்கூடம் போயிற்று வந்து என்னை மாறிவிடு” சொல்லிக்கொண்டு நேற்றப் பிடுங்கிய மிளகாய் பழத்தை காயப்போட சென்றாள்.

அம்மாவின் விருப்பப்படியே றமேஸ் பாடசாலைக்குப்போய்விட்டு வந்து தாயை தேடிப்போனான். போகும் வளியில்; ரீயூசனுக்கு போன வகுப்பு பொடியனுகள். “எங்கடா றமேஸ்? மாடு அம்மா வைச்சிருக்கிறா மாறிவிடப்போறன். ஏன்ரா மாடு மாடு என்று சாகிற ரீயூசனுக்கு வந்து பாக்கலாமே” நக்கலாகக் கேட்டான் ரூபன்.

உண்மையில் அவன் மாடு மாடு என்று சாகிறான்தான். காரணம் அவைதான் அந்தக்குடும்பத்தைப் பொறுத்தவரை குல தெய்வங்கள். அவைக்கு சிவப்பி கறுப்பி வெள்ளையம்மா குண்டாத்த என்று செல்லப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.வயிறு பட்டிணிஇல்லாமல் தூங்க அவைதான் அந்த குடும்பத்தின் தாய்ப் பறவைகள்.

வகுப்பு ரீச்சரும் சரி பாட ரீச்சரும் சரி றமேஸை பேசுவது அதிகம். காரணம் வீட்டுக்கஸ்ரம் அவர்களுக்கும் தெரியும். “ஏதோ கஸ்ரப்பட்டு அதுகள் படிப்பிக்குதுகள் நீ நல்லாப் படிக்க வேணும்” என்று தினமும் சொல்லுவினம்.தமிழ் பாட ரீச்சர் றமேஸின் வீட்டுக்கு பக்கத்து வீதியில்த்தான் இருக்கிறா. அடிக்கடி தாயிடம் எல்லாவற்றையும் சொல்லுவா.

“அம்மா நீங்கள் தான் அவன வீட்டில மறிக்காம அனுப்போணும்.கஸ்ரம் கஸ்ரம் என்று சொல்லி அதுகளின்ர வாழ்க்கையையும் கஸ்ரமாக்கக்கூடாது”

வீட்டுக்கு வந்த பார்வதி றமேஸை கூப்பிட்டு “தம்பி ரீச்சர் எனக்குத்தான் பேசிறா. நீ இனி ஓழுங்கா பள்ளிக்குடம் போ! அவ வீட்டில ரீயூசன் சொல்லிக்கொடுக்கிறா அங்மையும் உன்ன அனுப்பச்சொன்னவா. இண்டையில இருந்து அங்கயும் போ”என்று அன்பாகச் சொன்னாள்.

தாயும் கல்வியை வெறுக்கவில்லை பிள்ளையும் கல்வியை மறுக்கவில்லை. ஆனால் இவர்களது குடும்பச்சூழல் இதுபோன்ற விரிசலிகளையும் அக்கறையின்மையையும் தோற்றுவிக்க ஏதுவாக இருந்தது.ரீச்சர் றமேஸிடம் தான் கற்பிக்கும் பாடங்களுக்கு கட்டணம் அறவிடவில்லை. க.பொ.த சாதாரணதரம் படிக்கும்போதுதான் ரீயூனுக்குப்போனான். தான் எப்படியாவது படித்துவவிடவேண்டும் அம்மாவின் கனவை நினைவாக்க பேண்டும் என்பதில் குறியாக இருந்த றமேஸ் சாதாரண தரப்பரீட்சையில் முதல்தரத்தில் சித்தி பெறவில்லை இரண்டாம் முறை 8பாடங்களில் சித்திபெற்றான்.

அவனது உயர்கல்விப்படிப்பிற்கு அந்தக்கிராமத்தில் வசதி இருக்கவில்லை. அயல் பிரதேசத்துக்கு அல்லது 20முஅ கடந்துதான் கற்கவேண்டியிருந்தது.

தனது கிராமத்து மருத்துவமனை மருத்துவரின் உதவியுடன் ஒரு ஆண்கள் விடுதியில் தங்கிநின்று கல்லூரி ஒன்றில் கலைப்பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தான் றமேஸ்.
இடையிடையே வீட்டிற்கு வந்து போவான். பார்வதியும் தான் பொத்திப்பொத்தி வைத்திருந்த பணத்தை கொடுத்து ஏதோ சமாளித்தாள். றமேஸ் வீட்டு நிலையை நன்கு உணர்ந்ததால் அதற்கு ஏற்றால் போலவே செலவுகளையும் வைத்துக்கொண்டான்.இங்கும் அவனால் முதல்தடவையில் சித்தியடையமுடியவில்லை.

இரண்டாவது தடவைக்கு பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு ஒரு தையல்கடையில் வேலைக்கு சேர்ந்துகொண்டான். கிழமை நாட்களில் காலை8.00 மணிமுதல் இரவு 8.00மணிவரை கடையில் வேலை செய்துவிட்டு அதன்பின்பு தான் தங்கியிருந்த றூமிற்குப் போய் படிப்பான்.சனி ஞாயிறு தினங்களில் ரீயூசனுக்குப்போவான்.

அவன் தங்கியிருந்த றூமிற்கு பக்கத்துவீட்டு அன்ரிகூடகேட்பா “தம்பி இப்பிடி படிச்சு எப்படி பாஸ் பண்ணப்போற”என்று. அன்ரிக்கு தெரியாது அவனது வீட்டு நிலை;. றமேஸ் தன்னைப்பற்றி அனாவசியமாக யாரிடமும் கதைப்பதுமில்லை. கேட்டால் சொல்வதுமில்லை.

எது எப்படியோ அவன் பல்கலைக்கழகம் தெரிவாகிவிட்டான் என்ற செய்தியை அவனது பல நண்பர்கள் நம்பவில்லை. “அடேய் அவன் சுட்டிலக்கத்த மாறிச்சொல்லுறான். வடிவா பாக்கச்சொல்லு” “என்னடா கடயடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்” என்று பேசிக்கொண்டனர்.

தாயின் ஆசையிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் நல்ல நம்பிக்கை கொண்டதால் றமேஸ் இன்று பல்கலைக்கழகத்தில்.உண்மையில் குடும்பச் சுமை அவனது கல்லிக்கு பாரமாகவன்றி படிக்கற்களாக இருந்திருக்கிறது என்பதிலும் பார்க்க அவன் அவ்வாறு மாற்றியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.