Wednesday, September 28, 2011

சிலருக்கு ஆதாரம் பலருக்கு சேதாரம்


வன்னியில் போர் முடிவுக்கு வந்து இரண்டரை வருடங்கள் கழியும் நிலையில்மீளக்குடியமர்த்தப்பட்ட மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அபிவிருத்திபற்றியும் அரசியல் பற்றியும் ஆரவாரப்படும் அரசத் தரப்பினர் தற்போது இனக்கலப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அரசிடமும்,வேறு உதவும் அமைப்புக்களிடமும் உதவியை எதிர்பார்த்திருந்த மக்கள் அவை முழுதாக கிடைக்காத நிலையில் தமது சொந்த முயற்சிகளை ஆரம்பித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த எத்தணித்துவருகின்றனர்.
ஒருபக்கம் நல்ல முயற்சிகள் நடைபெற மறுபக்கத்தில் தீய,சமூகத்துக்கு ஒவ்வாத செயற்பாடுகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது.அதாவது சிலர் தமக்கான வாழ்வாதாரத் தொழில் எனக்கருதிச் செய்யும் தொழில் பலரது இறப்புக்களுக்கும் குடும்பத்தகராறுகளுக்கும் பிறழ் நடத்தைகளுக்கும் காரணமாக அமைவதனையே காணக்கூடியதாக உள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் சட்டவிரோத மது உற்பத்தி தொடர்பான வழக்கொன்று விசாரிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்படாத நாள் இல்லையென்றாகிவிட்டது.
இதில் சுவாரஷயமானதும் வேதனையானதுமான விடயம் என்னவென்றால் சட்டவிரோத மதுபான உற்பத்திக் குற்றச்சாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்படுபவர் தீர்ப்பறிக்கை சமர்ப்பித்த உடனேயே குற்றப்பணத்தை செலுத்தி சாதாரணமாக வெளியேறிவிடுகிறார்.அதுமட்டுமல்ல தான் இழந்துவிட்டதாகக் கருதும் அந்தப் பணத்தை வீடு சென்றதும் ஒரு நாளிலேயே உழைத்தும் விடுகிறார்.
காச்சுவதுக்கு மனமிருந்நால் காச்சிவிடலாம்
குடிப்பதுக்கு மனமிருந்தால் குடித்துவிடலாம்
கேட்பதற்கு யார் உள்ளார்?
இதுதான் வன்னியில் கசிப்பு உற்பத்தியாளர்களதும் வாடிக்கை நுகர்வோரதும் நிலைப்பாடாக உள்ளது.
கையும் களவுமாக பிடிபடும் ஒருசிலரே நாளாந்தம் நீதிமன்றுக்கு வருகின்றனர்.மற்றயபலர் சூழ்ச்சியாகத் தப்பித்து கொள்கின்றனர்.
ஒரு பின்தங்கிய கிராமம்.ஒதுக்குபுறமாக தனிமையில் உள்ள ஒரு வீடு.ஆனாலும் கொண்டாட்ட வீடுபோல ஆண்களால் மாலைப் பொழுது நிரம்பி வளிந்துகொண்டிருக்கும்.ஊரில் பலருக்கு அங்கு கசிப்பு விற்பனையாவது தெரியும்.துணிகரமாக இந்த தொழில் செய்ய பின்புலத்தில் அதிகாரத் தரப்பின் ஆதரவு இருப்பதாக மக்கள் உணருகின்றார்கள். காரணம் அடிக்கடி அந்த வீட்டுக்கு அவர்கள் விருநதாளிகளாக வந்து போவதுதான்.
வன்னியில் தட்டி கேட்டும் சுதந்திரம் இருப்பதாக இல்லை. சிலவேளை சட்டங்கள் கூட மாறுகின்றன. அன்றும் அதுதான் நடந்தது.குறித்த வீட்டில் நடப்பதை பார்த்து எரிச்சலுற்ற இளைஞன் தனக்கு தெரிந்த வகையில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தான்.
பொலிஸார் ஒருவர் வந்தார் கசிப்பை படிப்பவர் போல உடனே வீட்டுக்ககுள் நுளைந்தார்.பையனுக்கு சந்தோஷம் என்ர முயற்சி கைகூடிவிட்டது என்று மகிழ்தான். ஐந்து நிமிடத்தில் பொலிஸ் வெளியில் வந்தது கூடவே அந்த வீட்டு பெண்ணும் வந்தார். அந்த இளைஞனைப்பார்த்து பொலிஸகாரர் சிரித்துவிட்டு நீபோ நான்பாக்கிறன் என்றாராம்.
வெளியில் வரும்போது அவரது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் போத்தல் ஒன்றும்,கையில் காசும் இருந்ததை தான் அவதானித்ததாக பையன் சொன்னான்.(வன்னேரிக்குளத்தில் சம்பவம்,அக்கராயன் பொலிசாரிடம் முறையிடப்பட்டது,நடவடிக்கை-நீபோ நான் பாக்கிறன்)

நடைபாதை கசிப்பு வியாபாரி- விசுவமடுவில் சம்பவம்

இரவு 7 மணியிருக்கும்.திருமண வீடு ஒன்றுக்காக மூன்று நண்பர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்சில் சென்று இறங்கி அவரது வவீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றனர்.
ஒரு கடை அருகில் முதியவர் ஒருவர் சைக்கிளை சாத்திவிட்டு இருந்தார்.பஸில் சென்ற அலுப்புக்கு ஒரு பியர் அடிச்சா கலியாணவீட்டில இரவு ஏதாவது வேலை செய்து கொடுக்கலாம் எனத் திட்டமிட்ட மூவரும் அந்த முதியவர் அருகில் சென்று ஐயா இங்க சாராயம் பியர் விக்கிற கடை இல்லையா என்று கேட்டனராம்.
அதற்கு அவர் இருக்குது தூரப் போக வேணும். ஆமிதான் விக்கிறான்.பொது ஆக்கள் அத விக்க முடியாதாம். இப்ப அங்க இருக்காது. முடிஞ்சிருக்கும். நான் ஒண்டு வைச்சிருக்கிறன் அடிச்சுப்பாருங்களன் என்றாராம்.
இவர்களுக்கும் அது என்ன என்ற ஆவல்,ஆனால் கசிப்புப்பற்றி தெரியும்.பாய்க்கில கசிப்பு வச்சிருன்னிறன் தம்பி.நல்லா ஏத்தும் கொஞ்சம் அடிச்சுப்பாருங்க என்றாராம்.இவர்களுக்கும் புது இடம். வேண்டாம் ஐயா எங்களுக்கு என்றுவிட்டு, திரும்பி விட்டனர். திருமணவீட்டில் வந்து இராணுவ சாராயக் கடைபற்றி விசாரித்தபோது,விசுவமடு தேக்கங்காட்டுப்பகுதியில் மலிவு விலையில் அவற்றைப் பெறலாம் என்று அறிந்து கொணட மூவரும் “அட இடம் தெரியாததால் சந்தர்பத்தை மிஸ்பண்ணிட்டம்” என்று கவலைப்பட்டனராம்.
என்னதான் இருந்தாலும் சில குடும்பங்கள் தமது வாழ்வாதார தொழிலாக கசிப்பை உற்பத்தி செய்து விற்பது, நாளாந்தம் கூலிக்கு மாரடித்துவிட்டு “உடற்களைக்கு கொஞ்சம் குடிப்பம்” என்று எண்ணி தினமும் கசிப்பை குடித்து படிப்படியாக அவர்களது ஆயுளைக் அவர்களுக்கு தெரியாமலேயே குறைத்து வருகின்றது.
தினமும் போதையில் வீட்டுக்கு செல்லும் கணவன்மார் தனது மனைவியை வாய்கு வந்தபடி ஏசுவது,அடிப்பது,சந்தேகம் கொள்வது,இவை மட்டுமா? தான் பெற்ற மகளை,வளர்க்கும் பேரப்பிள்ளையைக்கூட தனது வெறியுடன் கூடிய காம பசிக்கு இரையாக்கும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
குற்றச் செயலைத் தடுப்பதற்கென்று வன்னியில் பணியிலுள்ளவர்கள்கூட இதுபோன்ற காரியங்களிலேயே ஈடுபடுகின்றனர்.அவர்களுக்கு சட்டவிரோத கசிப்பு உற்பத்தியாளர்களது பரிசுகள் சம்பளத்துக்கும் மேலாக அமைவதால் அதையெல்லாம் எப்படி அவர்கள் குற்றச்செயலாக உணர்ந்துகொள்வார்கள்?
ஒட்டுமொத்தத்தில் சிலரின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள் ஒட்டுமொத்த சமூகத்தை சீரழிப்பதாகவே நோக்கப்படும்.இது விடயத்தில் யார்தான் அக்கறை செலுத்துவரோ?போருக்குமுன் கௌரவமான தொழில் புரிந்த ஒரு குடும்பம் இப்போது குடும்பமாகச் சேர்ந்து கசிப்பு காச்சி விற்பதுக்கு யார் தான் காரணமோ?
நாளுக்குநாள் சீரளியும்,திட்டமிட்டு சிலரால் சீரழிக்கப்படும் சமூகத்தை காப்பாற்ற யார்வருவாரோ?

பிரசுரம்: சுடர் ஒளி வாரஇதழ் 25செப்ரெம்பர்-01ஒக்ரோபர்2011

Tuesday, November 10, 2009

விரக்தியில் தமிழினமும், விழா தேடும் கலைஞரும்…
[படம்] “ரோம் நகர் பற்றி எறிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் அதிகாரப் போதையை புரிந்து கொள்ள முடிகிறது.” கலைஞாரின் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ஈழத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் காப்பாற்றப்பட்ட மக்கள் எப்படிச் சிங்கள அரசின் முள்வேலி சிறைக்குள் ஆறு மாதத்திற்கு முன் வந்து சேர்ந்தார்கள் என்பது கலைஞாரின் குடும்ப செய்தி சேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்திருக்காது.
9 November 2009

Thursday, March 12, 2009

சிறுகதை “கடையடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்”


“யாரடா என்ர இடத்தில இருந்தது.இரண்டு நாள் வரேல்ல எண்டா சரி எல்லாம்” என்றபடியே வகுப்பறைக்குள் நுளைந்தான் றமேஸ். “ஓமடா நீ வீட்டில கிடந்திட்டு ஆடிக்கொருக்கா அமாவாளைக்கொருக்கா வருவ இதென்ன தோட்டமா” தோட்டம் செய்வது அவ்வளவு இழக்கனமோ தெரியவில்லைஇ வகுப்பு மெனிற்ரர் கேட்டார்.

மூன்று நாட்கள் பாடசாலைக்குச் செல்லாததால் வகுப்பு மெனிற்ரருக்கும் றமேஸிற்கும் வாக்குவாதம்.

இயற்கை எழில் கொஞ்சும் வயல் நிலங்களும் தோட்ட நிலங்களும் சேர்ந்த சிறிய கிராமத்திலஇ; ஒரு வறிய விவசாயிக்கு மூன்றாவதும் கடைசிப்பையனாகவும் பிறந்தவன் றமேஸ். எதுவோ தகப்பனின் உழைப்பாலும் தாயின் முயற்சியாலும் பாடசாலைக் கல்வியை தொடர்ந்தான்.
தந்தை கஸ்ரப்பட்டு உழகை;கக்கூடியவர்தான் ஆனால் உழகை;கும் பணத்தில் அரைவாசியை தன் உடல்அலுப்பைத் தீர்க்க எடுத்துவிடுவார்.மிகுதி அம்மாவின் கையில் சேரும். “இந்த மனுசன் திருந்தாது. எப்பவும்இப்படித்தான் வீட்டுக்கஸ்ரம் உணராததுகள்” தாய் பொறுப்புள்ளவளய்த்தான் இருக்க வேண்டும்.

றமேசின் தந்தைக்கு வயல் தோட்டம் என்று இருந்தாலும் நின்மதியாய் தொழில் செய்ய முதலீடு ஏதும் இருக்கவில்லை. ஏதோ தன் உழைப்புத்தான் முதலீடும் வருமானமும். அதனாலோ என்னவோ சிவலிங்கத்துக்கு வீட்டில் அக்கறையில்லை. அப்படிச் சொல்வதைவிட ஒரு விரக்தி நிலைதான் அது.
றமேஸ் பள்ளிப்பரவத்தில் சுட்டித்தனம் நிறைந்தவன். ஏடு தெடக்கிய அன்றே தன்னை சிவம் சேறின் மடியில் இருத்தியதற்காக தாய்க்கு வீட்டில் வந்து நல்ல அடி “ஏன் அவற்ற மடியில என்ன இருத்திநீங்க” என்று.

தாய் பார்வதி எப்படியாவது மகனைப் படிப்பித்து முன்னேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். காரணம் தகப்பன் ஒரு குடிகாரன் தான் எட்டாம் வகுப்புத்தான் படித்தவள். இருந்தாலும் குடும்ப வறுமை றமேஸின் கல்வியில் பல தடைகளைப் போட்டது.


றமேஸிற்கு பள்ளிக்குப்போவதைவிட தந்தையுடன் தோட்டத்துக்குப்போவதென்றால் நல்லவிருப்பம்;. காரணம் தனக்காக அப்பாவும் அம்மாவும் கஸ்ரபடுகிறார்கள் என்பதை நல்லாவே உணர்ந்திருந்தான். “அம்மா நான் இண்டைக்கு பள்ளிக்கூடம் போகேல்ல அப்பாவோட தோட்டத்துக்கு போகப்போறன்”என்றவாறு வீட்டுக்கு பின்புறமாகப்போனான் றமேஸ். “இல்ல ராசா நேற்ரும் ரீச்சர் கண்டு என்னத்தான் பேசினவா. அப்பாவோட நான் போறன். நீ பள்ளிக்கூடம் போ” என்றவாறே சிவப்பியில் கறந்து வந்த பாலை காச்ச ஆரம்பித்தாள்.

தாயின் உதவியுடன் 9ஆம் தரம் வரை வந்துவிட்டான். “அம்மா பாவம் எனக்hகக மாட்டுக்குப் பின்னால திரியிறா”இது தான் அவனது ஏக்கமாக இருந்தது. அதனால்த்தான் அடிக்கடி பாடசாலைக்குப்போகாமல் நின்று விடுவான். “அம்மா இண்டைக்கு மாடுகள நான் கொண்டு போறன்” என்றான். இல்ல இல்ல எனக்குத்தெரியும் அது நீ நிக்கவேண்டாம்” “அப்பிடி என்றால் பள்ளிக்கூடம் போயிற்று வந்து என்னை மாறிவிடு” சொல்லிக்கொண்டு நேற்றப் பிடுங்கிய மிளகாய் பழத்தை காயப்போட சென்றாள்.

அம்மாவின் விருப்பப்படியே றமேஸ் பாடசாலைக்குப்போய்விட்டு வந்து தாயை தேடிப்போனான். போகும் வளியில்; ரீயூசனுக்கு போன வகுப்பு பொடியனுகள். “எங்கடா றமேஸ்? மாடு அம்மா வைச்சிருக்கிறா மாறிவிடப்போறன். ஏன்ரா மாடு மாடு என்று சாகிற ரீயூசனுக்கு வந்து பாக்கலாமே” நக்கலாகக் கேட்டான் ரூபன்.

உண்மையில் அவன் மாடு மாடு என்று சாகிறான்தான். காரணம் அவைதான் அந்தக்குடும்பத்தைப் பொறுத்தவரை குல தெய்வங்கள். அவைக்கு சிவப்பி கறுப்பி வெள்ளையம்மா குண்டாத்த என்று செல்லப் பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.வயிறு பட்டிணிஇல்லாமல் தூங்க அவைதான் அந்த குடும்பத்தின் தாய்ப் பறவைகள்.

வகுப்பு ரீச்சரும் சரி பாட ரீச்சரும் சரி றமேஸை பேசுவது அதிகம். காரணம் வீட்டுக்கஸ்ரம் அவர்களுக்கும் தெரியும். “ஏதோ கஸ்ரப்பட்டு அதுகள் படிப்பிக்குதுகள் நீ நல்லாப் படிக்க வேணும்” என்று தினமும் சொல்லுவினம்.தமிழ் பாட ரீச்சர் றமேஸின் வீட்டுக்கு பக்கத்து வீதியில்த்தான் இருக்கிறா. அடிக்கடி தாயிடம் எல்லாவற்றையும் சொல்லுவா.

“அம்மா நீங்கள் தான் அவன வீட்டில மறிக்காம அனுப்போணும்.கஸ்ரம் கஸ்ரம் என்று சொல்லி அதுகளின்ர வாழ்க்கையையும் கஸ்ரமாக்கக்கூடாது”

வீட்டுக்கு வந்த பார்வதி றமேஸை கூப்பிட்டு “தம்பி ரீச்சர் எனக்குத்தான் பேசிறா. நீ இனி ஓழுங்கா பள்ளிக்குடம் போ! அவ வீட்டில ரீயூசன் சொல்லிக்கொடுக்கிறா அங்மையும் உன்ன அனுப்பச்சொன்னவா. இண்டையில இருந்து அங்கயும் போ”என்று அன்பாகச் சொன்னாள்.

தாயும் கல்வியை வெறுக்கவில்லை பிள்ளையும் கல்வியை மறுக்கவில்லை. ஆனால் இவர்களது குடும்பச்சூழல் இதுபோன்ற விரிசலிகளையும் அக்கறையின்மையையும் தோற்றுவிக்க ஏதுவாக இருந்தது.ரீச்சர் றமேஸிடம் தான் கற்பிக்கும் பாடங்களுக்கு கட்டணம் அறவிடவில்லை. க.பொ.த சாதாரணதரம் படிக்கும்போதுதான் ரீயூனுக்குப்போனான். தான் எப்படியாவது படித்துவவிடவேண்டும் அம்மாவின் கனவை நினைவாக்க பேண்டும் என்பதில் குறியாக இருந்த றமேஸ் சாதாரண தரப்பரீட்சையில் முதல்தரத்தில் சித்தி பெறவில்லை இரண்டாம் முறை 8பாடங்களில் சித்திபெற்றான்.

அவனது உயர்கல்விப்படிப்பிற்கு அந்தக்கிராமத்தில் வசதி இருக்கவில்லை. அயல் பிரதேசத்துக்கு அல்லது 20முஅ கடந்துதான் கற்கவேண்டியிருந்தது.

தனது கிராமத்து மருத்துவமனை மருத்துவரின் உதவியுடன் ஒரு ஆண்கள் விடுதியில் தங்கிநின்று கல்லூரி ஒன்றில் கலைப்பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்தான் றமேஸ்.
இடையிடையே வீட்டிற்கு வந்து போவான். பார்வதியும் தான் பொத்திப்பொத்தி வைத்திருந்த பணத்தை கொடுத்து ஏதோ சமாளித்தாள். றமேஸ் வீட்டு நிலையை நன்கு உணர்ந்ததால் அதற்கு ஏற்றால் போலவே செலவுகளையும் வைத்துக்கொண்டான்.இங்கும் அவனால் முதல்தடவையில் சித்தியடையமுடியவில்லை.

இரண்டாவது தடவைக்கு பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு ஒரு தையல்கடையில் வேலைக்கு சேர்ந்துகொண்டான். கிழமை நாட்களில் காலை8.00 மணிமுதல் இரவு 8.00மணிவரை கடையில் வேலை செய்துவிட்டு அதன்பின்பு தான் தங்கியிருந்த றூமிற்குப் போய் படிப்பான்.சனி ஞாயிறு தினங்களில் ரீயூசனுக்குப்போவான்.

அவன் தங்கியிருந்த றூமிற்கு பக்கத்துவீட்டு அன்ரிகூடகேட்பா “தம்பி இப்பிடி படிச்சு எப்படி பாஸ் பண்ணப்போற”என்று. அன்ரிக்கு தெரியாது அவனது வீட்டு நிலை;. றமேஸ் தன்னைப்பற்றி அனாவசியமாக யாரிடமும் கதைப்பதுமில்லை. கேட்டால் சொல்வதுமில்லை.

எது எப்படியோ அவன் பல்கலைக்கழகம் தெரிவாகிவிட்டான் என்ற செய்தியை அவனது பல நண்பர்கள் நம்பவில்லை. “அடேய் அவன் சுட்டிலக்கத்த மாறிச்சொல்லுறான். வடிவா பாக்கச்சொல்லு” “என்னடா கடயடியில நிண்டு என்னத்தப்படிச்சவன்” என்று பேசிக்கொண்டனர்.

தாயின் ஆசையிலும் ஆசிரியர்களின் வழிகாட்டலிலும் நல்ல நம்பிக்கை கொண்டதால் றமேஸ் இன்று பல்கலைக்கழகத்தில்.உண்மையில் குடும்பச் சுமை அவனது கல்லிக்கு பாரமாகவன்றி படிக்கற்களாக இருந்திருக்கிறது என்பதிலும் பார்க்க அவன் அவ்வாறு மாற்றியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

Friday, February 20, 2009

வெளிச்சத்தின் கனவால் சிதறிப்போன எண்ணங்கள்.

வழமைபோல் எனது அறையில் நான்மட்டுமே. ஏதோ பெரிய வேலைமுடித்துவிட்டு வீடுதிரும்பியவன் போல களைத்த முகத்துடன் சேட்டைக்கழற்றிவிட்டு கட்டிலில் சாய்ந்தேன். மிளிர்ந்துகொண்டிருந்த ரீயூப்லைற்றைச்சுற்றி, விடியல் இதுதான் என்றெண்ணி தமது உல்லாசமான இறக்கைகளுடன் விட்டில் பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன. ஆதிசயக்கண்களுடன், அவர்களின் வாழ்வுபற்றிய கனவுடன் நான். காரணம் எனக்கொரு நண்பன் இருக்கின்றான். அவனுக்கு விட்டில்கள் என்றால் பிரியம். நண்பன் என்கிறேன் அவனுக்கு விட்டில்கள் என்றால் பிரியம் என்கிறேன் என்று குழம்பலாம், ஆனால் எனது நண்பன் யாருமல்ல ஐந்தறிவுள்ள நற்குணமுள்ள வீட்டுப்பல்லிதான். அவனுக்கும் எனக்குமுள்ள உறவு, நெருக்கம் பற்றி கேள்விகள் எழலாம், பெரிதாக ஏதுமில்லை. நான் நினைப்பதை சரிவராது என்று முற்கூட்டியே சொல்லிவிடும் திறமையால் அவ்வளவு உறவு.

இப்போதெல்லாம்நான்நினைப்பதொன்றுநடப்பதுவேறொன்று.இதுஎனக்கானதுமட்டுமல்லதமிழ்மக்களுக்கும்.நண்பனைபகலில்சந்தித்துக்கொள்வதுகுறைவு. இரவில்த்தான்வருவான்சாப்பாட்டிற்கோ, என்னுடன்கதைக்க வோதெரியவில்லை.நான்நினைப்பதுஇரண்டுநோக்கத்துக்காகவும்வருகின்றானென்று.

ஆதலால்அவனுக்காகமின்விளக்கைஅணைக்காமல்காத்திருப்பேன்.இவ்வளவிற்குள்எனதுநண்பன்ஊனமானவன்தனதுவாலைஎதன்காரணமாகவோஇழந்திருக்கிறான்.ஆனால்இதுவரைக்கும்அந்தநிலைபற்றிநான்கேட்கவுமில்லை,அவன்சொல்லவுமில்லை.இப்போதெல்லாம்முன்அனுபவம்இசம்பவம்என்றுஎதையும்யாருடனும்கேடுப்பழகிக்கொள்ளமுடியாது.அப்படிசற்று இறங்கிப்பழகினால்ஆபத்து. அதுவும்நெருக்கடிதான்.

அதனால்அவனதுஊனத்தைப்பற்றிநான்பொருட்படுத்தியதில்லை.தனதுஉயிர்வாழ்விற்காகவெனஎனதுஅறையைபயன்படுத்துகின்றானோ,அல்லதுநான்தனியேஇருக்கின்றேன்என்றுபார்க்கின்றானோதெரியவில்லை.வருவதும்போவதும்வழமையாகிவிட்டது.


இப்போதெல்லாம்ஆபத்துக்களைநாங்கள்தேடிச்செல்லத்தேவையில்லைஅதுவேபட்டங்களுடனும்பரிசுகளுடனும்எம்மைத்தேடிவரும்.நண்பன்அப்படிப்பட்டவனில்லை. பாவம்ஐந்தறிவுமட்டுமல்ல, இயலாதவனும்கூட. நம்பிக்கைபற்றிஎப்படிநியாயப்படுத்துவது. அதுதான்ஆபத்தானதே. விட்டில்கள்தம்வாழ்வைஅர்ப்பணிக்கஅங்குவருகின்றார்களோ,மாறாகசிறுபொழுதேனும்ஒளியில்வாழ்ந்துவிட்டுமற்றவர்வாழ்விற்குவழிசமைக்கிறார்களோதினமும்மாறிமாறிஇவைநடந்தேறுகின்றன.வருகிறார்கள்நண்பனின்பசியும்போகின்றது.
த்தனையோஉயிர்கள்விளக்கொளியையும்காணமுடியாமல்பேரிரைச்சல்களையும்,வெடிப்பொலிகளையும் வாழ்வின் இராகமாக ஏற்று எண்ணாத் தேவைகளை பூர்த்திசெய்யமுடியாமல்வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இயலாத நண்பனையும், அவனது வீரத்தையும் பரீட்சிக்க பலவிட்டில்கள் தமது சாகசங்களைக் காட்டபாவம் வாலையிழந்தவன் தன்பரீட்சியத்தால்அவர்களை மடக்குவதும் என்கண்களில் படும். எதுவானாலும் விட்டில்கள் சிறிதுகாலம்தான் வாழ்பவை. விட்டிலுக்கு பறக்க இருக்கும் சுதந்திரம் பல்லிக்கில்லை. வாலை இழந்த நண்பன் கஸ்ரப்பட்டு இடத்திற்கிடம் மாறி இயன்றளவு முயற்சியால் தன்இலக்கைஅடைந்துவிடுவான். “கடினஉழைப்பும்தளராமனமும்உயிர்வாழ்வதற்குமட்டுமல்லஇஉயிரைக்கொடுக்கவும்தேவைஉண்மைதான்.இன்றுங்கூட எம்மக்களின் வாழ்வு இந்தநிலையில்த்தான். பல்லிவேட்டையில் தோற்றதில்லை…….
பலர் பல்லியைப் பற்றிபலகதைபேசுவார்கள். பல்லிசொற்பலன், உச்சத்துப்பல்லி அச்சமில்லை,பக்கத்துப்பல்லிபயமில்லை. இதையும்விடதிருப்பி ஏசுவோரும்கூட, இவையெல்லாம் முன்னோர்களின் மூடநம்பிக்கை. இதை இப்பவும் ஆதரிப்போரும் உளர். இருந்தும் வெளியில் நான்நாலும்தெரிந்தவன், நவீனத்துவம் அடைந்தவன் என்பதையும் மறுப்பதில்லை. எங்காவது பல்லி சொல்லிக் கேட்டால் உடனே நிலத்தில் சுண்டுவதும், இப்போ என்னநினைத்தனான் அறுந்தபல்லி குறுக்க பாயுது என்று தடுமாறுவர். ஆவ்வளவிற்கு பல்லி என்னதான் சொன்னது மரபை ஆதரிப்போர் இதுபற்றி என்னசொல்கின்றனரோ? சிலமனிதர்கள் கதைப்பதே பல்லிபோன்றுதான் என்பர். பாவம்ந்தளவிற்கு என்னதான் சொல்கின்றது. பல்லியின் மொழியை யார்படித்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை அற்றவரின் தேடல் விளக்கம்தான் இவை என்று சொல்ல முடியும். அன்பு, அறிவு,அறம் அனைத்தும் தன்னிடம் இருக்கையில் அதைஅறியாது வெளியில் தேடுவது இன்று ஒரு போதும் ஏற்கமுடியாததே. நம்பிக்கையின் துணையுடன்தான் இருப்பு உறுதிப்படுத்தப்படுகையில் மூடக்கொள்கை அதைக்கூறுபோட விளைகின்றது.
சாதாரணமாக நள்ளிரவில் அவன் எனக்குநன்றி சொல்லிவிட்டுப் போய்விடுவான். எனக்கு அப்போதும் கூடதூக்கம் வரவில்லை. மாடிக் கட்டிடங்களில் வசித்தாலும் புழுதிநிலத்தின் வாசனையும், பூத்துக் குலுங்கும் வயல்நிலங்களும் மனதுக்குள் வந்து வண்ணத்திரையில் கோலமாய் தெரிகின்றன. இப்போ புழுதிகிளம்பும்படியாகவும், புகைமூடும்படியாகவும் பாலைவனமாகி, அன்றைய கரிகால சோழனும் கலிங்கத்துப் பரணியுமாகிவருகிறது எமதுநிலம். எப்படிதூக்கம்வரும். ல்லாமே போலிஎன்று தெரிந்த பிறகும் வாழ்வை வெறுக்கமனம் தயாரில்லை. ஏனென்றால் நம்பிக்கையின் அத்திவாரம் அவ்வளவு உரமாக இருக்கின்றது.
மனதுக்கு சஞ்சலமாக இருக்கும்போது தூக்கம் எப்படிவரும்.பேனாக்கள், பொத்தகங்கள் எல்லாம் வெறும் சடப்பொருட்களாகவே இன்று. எதிலும் உயிரைக்காண முடியாது. காரணம் அதைவிட மேலான கருவிகள்மலிந்துகிடக்கின்றன. கைகள் எதற்கு நகர்ந்தாலும் நில்என்று தடுக்கபலகைகள். பேரம்பேசவாவது ஒருவர் முனைந்தால் பெயரைகூட விட்டுவைக்க முடியாதாம். மனம் திறந்து மற்றவர்களிடம் பேசுவதென்பது இன்றுசுலபமானதல்ல. போகுமிடமெல்லாம் படுகொலைகள், சித்திரவதைகள் உரிமைமீறல்கள் என்று தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. தமிழினப் படுகொலைகள் நாடுகடந்து பேசப்பட்டாலும் வாயளவிலேயே நின்றுவிடுகின்றன. அந்நியநாட்டுப் படைகளை தமிழன் என்றுவருணித்த சிங்களதேசம், உண்மைத் தமிழனை எப்படிஅணுகும்? புறக்கணிப்புக்கள் இருக்கும்போது, புறகணிப்புக்கள் எப்படி மாறப்போகின்றன? பொறுமை இருப்பை இழக்கவைத்தது. தினமும் ஒருவிடியல் கனவுடன் எம் இருப்பு தொடர்கின்றது.